ஸ்ரீநகரில் ஏற்பட்ட பனிப்பொழிவு, நிலச் சரிவில் சிக்கிய ராஜஸ்தான் பல்கலைக்கழ கத்தை சேர்ந்த 7 ஆசிரியர்கள், 74 மாணவர்களை ராணுவம் பத்திரமாக மீட்டது.
பிரபல தனியார் கடன் நிறுவனமான பந்தன் வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதி காரியாக ராஜீவ் மந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் புனே வணிக வளாகத்தில் ரூ.13 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதி பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ லாஸ்யா நந்திதா (37) ஹைதராபாத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு வேலை மற்றும் கல்வியில் முஸ்லிம் சமூகத்தின ருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மகா ராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ராய்ஸ் ஷேக் கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹொய்சாலா (34) என்ற கிரிக்கெட் வீரர் பெங்களூரு நகரில் ஏஜிஸ் தென் மண்டல தொடரில் விளையாடும் பொழுதே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
“அல்லா யாரை அழைக்கிறாரோ அவர் மட்டுமே ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியும்” என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக, ஹஜ் கமிட்டியின் தலைவர் அப்துல்லா குட்டி சர்ச்சைக்குரிய வகையிலான கருத்தை தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் வெள்ளியன்று அதிகாலை ரூ.24 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகா லாந்தின் முக்கிய அமைப்பான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் கட்சியின் உயர்மட்ட தலைவரான காம்பே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.