சண்டிகர், பிப்.16- 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 20-ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற வுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் பஞ்சாப் மாநிலத்தை முற்றுகையிட்டுள் ளனர். இதனிடையே, சண்டிகர் அருகே ராஜ் புராவில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கி ரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண் டார். அப்போது அவர் பேசியிருப்பதாவது: பஞ்சாப் உணர்வுப்பூர்வமான எல்லை மாநிலம். இங்கு முதலில் அமைதியே முக்கியம். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இங்கு அமைதியை நிலைநாட்ட முடியும். ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என்று சிலர் (ஆம்ஆத்மி கட்சியினர்) கேட்கின்ற னர். அவர்களை நம்ப வேண்டாம். அவர் கள் பஞ்சாப்பை அழித்து விடுவார்கள்.
ஒவ்வொருவருக்கும் வாய்ப்புக் கொடுத் துப் பார்க்க இது ஆய்வகம் அல்ல. பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரி வால் என தலைவர்களின் முகத்தை மட் டுமே பார்க்காதீர்கள். அவர்களின் பின் னால் மறைந்திருக்கும் சக்திகளைப் பாருங்கள். அவர்களின் செயல்பாடு களைப் பாருங்கள். பிறகு அவர்களின் அரசியலை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் ஏழை, எளிய மக்களை பாஜக வதைத்தது. நாளுக்கு நாள் பெட்ரோல் விலையை ஏற்றி வந்தார்கள். இப்போது தேர்தல் என்பதால் விலை உயர்வை நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால், எரி பொருள் விலை உயர்வால் பயனடைந்த வர்கள் யார்? என்பதை பாருங்கள். பிரதமர் மோடிக்கு பின்னால் ஏழை களின் சக்தி இல்லை.
அவர் தனிப்பட்ட நபர் அல்ல. அவருக்குப் பின்னால் மறை முக சக்தி உள்ளது. விவசாயிகளின் சக்தி யை இவர்கள் கொண்டிருந்தால் தில்லி போராட்டத்தில் 700 விவசாயிகள் இறந்தி ருக்க மாட்டார்கள். ஆம் ஆத்மி கட்சியினர், தாங்கள் தான் முதன்முதலாக ‘மொஹல்லா கிளி னிக்’குகளை தொடங்கியதாக கூறு கின்றனர். ஆனால் முதல் ‘மொஹல்லா கிளினிக்’ காங்கிரஸ் ஆட்சியில் ஷீலா தீக்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது. பொய்யான வாக்குறுதிகளை நான் அளிக்க மாட்டேன். பொய்யான வாக்கு றுதிகளை நீங்கள் கேட்க விரும்பினால், பிரதமர் மோடி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பாதல், தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் சொல்வதைக் கேளுங் கள். நான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசும் எண்ணம் கொண்டவன். இவ்வாறு ராகுல் காந்தி பேசி யுள்ளார்.