states

img

புல்வாமா தோல்விகளும் புனையப்பட்ட வெற்றிக் கதைகளும்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாலக் கோட்டில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மீது வான்வழித் தாக்கு தல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. 1971 போருக்குப் பிறகு இப்போது              தான் பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. உடனே, வெற்றிக்களிப்புடன் மோடியின் அரசும், மீடியாக்களும் பாலக்கோடு நட வடிக்கையை வானளாவப் புகழ்ந்தன.  ஆனால் உண்மையில் இந்த வான்வழித் தாக்குதல் பல அபாயகரமான தவறுகளுக்கு வழிவகுத்தது . செயற்கைக்கோள் படங்கள் பாகிஸ்தானின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தாக்குதல் எதுவும் நடத்தப்பட வில்லை என்பதை உறுதி செய்கின்றன. இந்திய விமானப்படை தனது சொந்த விமானத்தையே சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மிக்- 21 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி விமான பைலட் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானைக் கைது செய்தது. மிகப் பெரிய வெற்றி என்று  பிரச்சாரம் செய்ததற்கு மாறாக, அது ஒரு அரைகுறையான - தோல்வியடைந்த நடவடிக்கை என்பதே உண்மையாகும். அப்போது பாகிஸ்தானில் இந்திய  தூதராக இருந்த அனூப் பைசா ரியா என்பவர் கரண்தாப்ப ருக்கு அளித்த பேட்டியில், “பாலக்கோடு தாக்குதல் குறித்து நாம் வெறும் கதையாடல்களை மட்டுமே வைத்துள்ளோம். வெற்  றிக்கான எந்த ஆதாரமும்  இல்லை” என்றார். ஒரு பேரழி வுக்கு மிக அருகில் அந்த நட வடிக்கை சென்றது. அப்போ தைய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ 2019 இல் இந்திய- பாகிஸ்தான் மோதல் அணு ஆயுத மோதலின் விளிம்புக்குச் சென்றது என்பதை உலகம் சரியாக அறிந்து கொள்ளவில்லை என்று கூறினார். 2019 நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் மோடி இந்த உண்மைகள் எதையுமே பொருட்படுத்தவில்லை. தனது அரசு புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டதாக மோடி தொடர்ந்து பெருமை பேசினார். வீரஞ்செறிந்த பாலக்கோடு விமானத் தாக்குதலை நடத்திய வீரர்களுக்கு முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும், தனது புதிய இந்தியா, பகைவரின் பிரதேசத்தில் நுழைந்து தாக்குதல் தொடுத்தது என்றும் கூறினார் மோடி . ஆயுதம் தாங்கிய படைகளை வாக்குகளுக்காக அரசியலாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியத் தேர்தல் ஆணையமோ தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய குற்றத்திலிருந்து மோடியை விடுவித்தது. பாலக்கோடு தாக்குதலில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியை பெரும்பாலான மீடியாக்கள் மறைத்தன. பாஜகவின் தேசப் பாதுகாப்பு  ஆரவாரப் பேச்சுக்களைத்தான் அவை பரப்பின. 2019 நாடாளு மன்றத் தேர்தல் நமது வீரர்களின் இறந்த உடல்களின் மீது நடத்தப்பட்ட தாக சத்யபால் மாலிக் கூறுகிறார். துணை ராணுவப்படை வீரர்களின் உயிர்கள் பறிபோனது குறித்த புலன் விசாரணை நடத்தப்படவே இல்லை. உரிய விசாரணை நடைபெற்றிருந்தால் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டியிருந்திருக்கும்.பல அதிகாரிகள் சிறைக்குப் போயிருப்பார்கள் . கடுமையான சர்ச்சை கள் ஏற்பட்டிருக்கும் என்கிறார். உண்மைக்கு மாறான பாலக்கோடு வெற்றிக் கதைகள் மூலம் பாஜக பெரிய அளவில் பலன் பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றது. தேர்தல் முடியும் வரையில் விமானப்படை அதிகாரிகளின் நலன்களும், பாஜகவின் அரசியல் நலன்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டன. தேர்தல் முடியும் வரையில் பாலக்கோடு விமான தாக்குதல் தோல்விகள் மக்களிடம் மறைக்கப்பட்டன. தனது சொந்த சகோதர விமானத்தையே சுட்டு வீழ்த்திய பின்னரும், புனை யப்பட்ட கதைகளைப் பரப்பி, தவறுகளை மறைத்தது விமானப்படை.