ஜனவரியில் 6.52 சதவிகிதத்தை எட்டிய சில்லரைப் பணவீக்கம்!
2023 ஜனவரியில், நுகர்வுப் பொருட்கள் விலை குறி யீட்டெண் (Consumer Price Index - CPI) அடிப்படையிலான சில்லரை விலைப் பண வீக்கம், முந்தைய 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த 2022 டிசம்பரில் 5.72 சதவிகிதமாக இருந்த சில்லரை விலைப் பணவீக்கம், 2023 ஜனவரி யில் 6.52 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றமே, 2023 ஜன வரியில் சில்லரை விலை அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிக்கக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதாவது உணவுப் பொருள் பணவீக்கம் இந்தக் காலத்தில் அதி கரித்துள்ளது. உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 2022 டிசம்பர் மாதத்தில் 4.19 சத விகிதமாக இருந்தது. இது 2023 ஜனவரி யில் 5.94 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், உணவுப் பொருள் பணவீக்கமா னது கிராமப்புறங்களில் 6.85 சதவிகிதமாக வும், நகரங்களில் 6 சதவிகிதமாகவும் இருந் துள்ளது.
புதுதில்லி, பிப்.25- அடுத்த 2 மாதங்களுக்குள், பால் பொருட்கள், ஏசி, குளிர்சாதனப் பெட்டி, மது பானம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் 3 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த் தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்த நுகர்பொருள் துறை யைச் சேர்ந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. அதன்படி, பாக்கெட்டுகளில் அடைக் கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பால் பொருட்களின் விலையும், ஏசி, குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட சாத னங்களின் விலையும் உயர இருப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மூலப்பொருட்களின் விலை உயர்வால் குறிப்பிட்ட சில பாக்கெட் பொருட் களின் விலையை இரண்டரை முதல் 3 சதவிகி தம் வரை உயர்த்த உள்ளதாக ‘பிரிட்டானியா’ பிஸ்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல ‘பாஷ்-சீமென்ஸ்’ நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் முதல் வீட்டு உபயோக பொருட்க ளின் விலையை 3 முதல் 5 சதவிகிதம் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட துணிகள், அழகு சாதனப் பொருட்கள், மதுபானங்களின் விலை 8 முதல் 10 சதவிகிதம் வரை உயரக்கூடும் என வும் பால் விலை உயர்வால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் தெரிவித் துள்ளன. ‘வோல்டாஸ்’ நிறுவன ‘ஏசி’யின் விலை ஜூன் மாதம் அதிகரிக்கும் எனவும் தகவல் வெளி யாகியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்க ளின் விலை அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகி யவையும் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. அதேவேளையில், இந்த விலை உயர்வு, பொருட்கள் நுகர்வில் தாக்கத்தை ஏற்படுத் தாது என்றும், ஏப்ரல் - ஜூன் மாத காலாண் டில் கிராமப்புற சந்தைகள் மீள வாய்ப்பி ருப்பதாகவும் நுகர்பொருள் துறையை சேர்ந்த நிறுவனங்கள் ஆறுதல் அளித் துள்ளன.