states

img

நலத் திட்டங்களுக்கான செலவு குறைக்கப்பட்டதே உண்மை!

நிர்மலா சீதாராமனுக்கு  ப. சிதம்பரம் பதிலடி

புதுதில்லி, ஏப்.13- ‘நாட்டின் வளர்ச்சித் திட்டங்களு காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்துள்ள செலவினம் முந் தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செய்யப்பட்டதைக் காட்டி லும் மிக அதிகம்’ என்று ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் வளர்ச்சித் திட்டங்க ளுக்காக பிரதமர் மோடி தலைமை யிலான அரசு 2014-22 காலகட்டத்தில் ரூ. 90.9 லட்சம் கோடி செலவழித்துள் ளது. இது எதிர்க்கட்சியின் சில பிரி வினர் விமா்சித்து வருவதைக் காட்டி லும் மிக அதிகமாகும். ‘தேஜகூ’ ஆட் சிக்கு முன்பாக 2004-14 கால கட்டங்க ளில் (ஐமுகூ ஆட்சிக் காலத்தில்) ரூ.  49.2 லட்சம் கோடி மட்டுமே செலவி டப்பட்டுள்ளது’ என்று ரிசா்வ் வங்கி யின் புள்ளிவிவரங்களை காட்டி நிர் மலா சீதாராமன் விளக்கி இருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலை வரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்  தில் செவ்வாயன்று பதிலளித்துள்ளார்.

 “சராசரி இந்தியர்கள், எண்கள் அடிப்படையிலான நிதி கணக்குகளை புரிந்துகொள்ளாத அளவுக்கு சரா சரிக்கும் குறைவான அறிவை பெற்றி ருப்பார்கள் என்று ஒன்றிய நிதிய மைச்சர் நினைத்திருப்பது வருத்தத் துக்குரியது. நிதியமைச்சரின் எண் கணிதம் சரியானது; ஆனால், அவரு டைய கணித முடிவுரை தவறானது. பட்ஜெட்டின் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும். அதுபோல, மொத்த செலவினமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும். வளா்ச்சித் திட்டங்களுக்கான செலவினமும் நலத் திட்டங்களுக்கான செலவினமும் ஒவ் வொரு ஆண்டும் உயர்ந்து வரும்.

எனவே, மொத்த செலவினத்தை யும், ஒவ்வொரு துறைசார்ந்த செல வினத்தையும் நிதியமைச்சர் ஒப்பீடு செய்து பார்ப்பது அவசியம். அவ்வாறு ஒப்பீடு செய்து பார்க்கும்போது, நலத் திட்டங்களுக்கான செலவினம் 2014-15 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடுமையாக சரிந்திருப்பது தெரியவரும். ஒன்றிய நிதியமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கும் ரிசா்வ் வங்கியின் புள்ளி விவரங்கள், எந்த அளவுக்கு மொத்த செலவின விகிதம் குறைந்தி ருக்கிறது என்பதையும் காட்டுகிறது. ஐமுகூ ஆட்சிக் காலத்தில் மொத்த செலவினத்தின் சராசரி 9 சதவிகித மாக இருந்த நிலையில், தேசிய ஜன நாயக கூட்டணி ஆட்சியில் 5 சதவிகி தமாக குறைந்துள்ளதைத்தான் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன” என்று ப.  சிதம்பரம் தெரிவித்துள்ளார்.