ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் உள் ளது பிரஹலாத் சந்திர பிரம்மச்சாரி அரசு உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் 95 மாணவர்கள் சமஸ்கிருத பாடத்தை தேர்வு செய்து படித்து வருகின்றனர். 95 மாணவர்கள் பயின்றாலும் ஒரே ஒரு சமஸ்கிருத ஆசி ரியர் தான் அப்பள்ளியில் இருந்தார். அவ ரும் சில நாட்களுக்கு முன் வேறு இடத் திற்கு பணி மாறுதலாகிச் செல்ல, கடந்த 5 மாதங்களாக சமஸ்கிருத வகுப்பு நடத் தப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பள்ளியில் அரை யாண்டு தேர்வில் சமஸ்கிருத பாடத் தேர்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாண வர் ஒருவர்,”தங்களுக்கு பாடம் சொல் லித்தர ஆசிரியர் இல்லை. அதனால், எங்களுக்கு தெரிந்ததை எழுதுகிறோம். எங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க் காதீர்கள்’’ என தேர்வுத்தாளில் எழுதி யுள்ளார். அந்த மாணவரின் விடைத் தாளை திருத்திய ஆசிரியர் ஒருவர் சமூக வலைதளத்தில் இதை லீக் செய்ய, இந்த விவகாரம் மாநில அரசு கவனத்திற்கு சென்றுள்ளது. ஆசிரியர் இல்லாத பாடத்தை ஏன் படிக்க வேண்டும் என மாணவர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மாண வர்களின் பெற்றோர்களும் சமஸ்கிருதம் வேண்டாம், மாநில மொழி பாடங்களை மட்டும் சொல்லித்தர கோரிக்கை விடுத் துள்ளதாக செய்திகள் வெளியாகியுள் ளது.