ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு
பாதுகாப்பு தணிக்கைகள் முடிவடையும் வரை ஏர் இந்தியா போயிங் வகை விமானங்களுக்குத் தடை விதிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை அன்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் அஜய் பன்சால் என்பவர்,”மே 20 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் தில்லியில் இருந்து சிகாகோ சென்றேன். இருக்கைகளை சாய்க்க முடியவில்லை, பொழுது போக்கிற்காக தொலைக்காட்சி உள்ளிட் டவை வேலை செய்யவில்லை. ஏசி வேலை செய்யவில்லை. 1934ஆம் ஆண்டு விமானச் சட்டம், 1937 ஆம் ஆண்டு விமான விதிகள் ஆகியவற்றை விமான நிறுவனங்கள் சரிவர கடைப் பிடிப்பதில்லை. இதனால் ஒட்டுமொத்த விமான நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஏர் இந்தியா போயிங் வகை விமானங்க ளுக்குத் தடை விதிக்கவேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார். அஜய் பன்சாலின் மனு இன்னும் பட்டியலிடப்படவில்லை. விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
256 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்தி லேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்கள் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விமான விபத்தில் மொத்தம் 270 பேர் பலியாகினர். இந்நிலையில், டிஎன்ஏ பரிசோத னைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அன்று மதியம் வரை 259 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அதில் 256 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டவர்களின் உடல்களும் அடங்கும்.