கடந்த 2016இல் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பயங்க ரவாதிகள்தாக்கு தல் நடத்தினர். இந்த தாக்குத லுக்கு மூளையா கச் செயல்பட்டதாகக் கருதப் படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதி ஷாகித் லத்தீப் பாகிஸ்தானின் தஸ்கா நகரில் உள்ள மசூதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் புதனன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தா னின் சியால்கோட் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 1993இல் காஷ்மீர் பள்ளத் தாக்கிற்குள் ஊடுருவிய ஷாகித் லத்தீப் கைது செய்யப்பட்டு, ஜம்மு சிறையில் 16 ஆண்டுகள் அடைக்கப்பட்டு 2010இல் விடு விக்கப்பட்டார். சிறைவாசத் தற்கு பிறகு 2010இல் பாகிஸ்தா னுக்கு நாடு கடத்தப்பட்ட ஷாகித் லத்தீப் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாதக் குழுவில் சேர்ந்து பதான்கோட்டில் தாக்கு தல் நடத்தினார்.