புதுதில்லி, நவ.12- இந்தியக் குடும்பங்களின் வரு வாய், செலவுகள், சேமிப்புகள் குறித்து, ‘டிவி9 நெட்வொர்க்’ நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்திய குடிமக்களின் தரத்தை கணக்கீடு செய்யும் ‘மணி9’ (Money9) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில், இந்தியாவின் 69 சத விகித குடும்பங்கள் பொருளாதார பாதுகாப்பில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சராசரியாக 4.2 உறுப்பினர் களைக் கொண்ட இந்தியக் குடும் பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.23 ஆயிரமாக உள்ளது. அதிலும், 46 சதவிகிதத்திற்கு அதிகமான குடும் பங்கள் மாதம் ரூ. 15 ஆயிரத்திற் கும் குறைவான வருவாயையே ஈட்டு கின்றன. 3 சதவீத இந்தியக் குடும்பங் கள் மட்டுமே ஆடம்பரமான வாழ்க் கைத் தரத்தைக் கொண்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான குடும் பங்கள் அதிக வருவாய் கொண்ட உயர்தர மற்றும் உயர்-நடுத்தரப் பிரி வைச் சேர்ந்தவைகள் என்று தெரிய வந்துள்ளன. “இந்தியாவின் 70 சதவிகிதக் குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் சேமித்து வைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. வங்கி வைப்புத் தொகை, காப்பீடு, அஞ்சலக சேமிப்பு, தங்கத்தில் முதலீடு செய்வது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி அந்தக் குடும்பங்கள் தங்களது வரு வாயை சேமிக்கின்றன.
இந்த சேமிப்பில், வங்கி, அஞ்ச லக சேமிப்பு, ஆயுள் காப்பீடு மற்றும் தங்கம் ஆகியவையே முக்கிய இடம் பெற்றுள்ளன. இந்தியக் குடும் பங்கள் மேற்கொள்ளும் 64 சதவிகித சேமிப்புகள் வங்கிகள் மூலம் மேற் கொள்ளப்படுகின்றன. 19 சதவிகிதக் குடும்பங்கள் மட்டுமே காப்பீடுகள் மூலம் சேமிக்கின்றன. எனினும், குறைந்த வருவாய் பிரி வினரிடையே சேமிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படு கின்றன. இருந்தாலும், இந்தியாவின் ஐந்தில் இரண்டு குடும்பங்களால் தங்கள் வருவாயை சேமித்து வைக்க முடிவதில்லை. இந்த விவகாரத் துக்கு அரசு கொள்கை வகுப்பா ளர்களும், சந்தை நிறுவனங்களும் அதிக கவனம் செலுத்த வேண்டி யுள்ளது. 22 சதவிகித இந்தியக் குடும்பங் கள் பங்குகள், பரஸ்பர நிதிகள், யுலிப் மற்றும் தங்கம், நிலம் போன்ற சொத் துக்களில் முதலீடு செய்துள்ளன. இதில், நிலம் போன்ற சொத்துகளில் தான் முதலீடு அதிகமாக (18 சதவிகி தம்) உள்ளது. அதனைத் தொடர்ந்து பரஸ்பர நிதிகள் (6 சதவிகிதம்), பங்குச் சந்தை முதலீடு (3 சதவிகிதம்), காப் பீட்டுத் திட்டங்கள் அல்லது யுலிப்கள் முதலீடு (3 சதவிகிதம்) என்ற அளவில் உள்ளன.
இந்திய குடும்பங்களில் 11 சதவிகி தம் பேர் மட்டுமே வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிறுவனங்களிடமி ருந்து கடன் பெற்றுள்ளனர். அனைத்து சில்லரைக் கடன்களிலும், தனிநபர் கடன்கள்தான் மிக அதிகமாக உள் னன. அதற்கு அடுத்தபடியாக வீட்டுக் கடன்கள் அதிக அளவில் வாங்கப் படுகின்றன. வருவாய், செலவுகள், சேமிப்பு, கடன்கள் போன்றவற்றை அடிப்ப டையாகக் கொண்டு வகுக்கப் பட்டுள்ள பொருளாதார பாதுகாப்பு குறியீட்டின்படி, ரூ. 15 ஆயிரம் மற் றும் அதற்கு மேல் மாத வருவாய் பெறும் 42 சதவிகிதக் குடும்பங்க ளுக்கு பொருளாதார பாதுகாப் பின்மை நிலவுகிறது. அத்துடன், ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான வருவாய் கொண்ட குறை வரு வாய்ப் பிரிவு குடும்பங்களையும் சோ்த்தால், இந்தியாவின் 69 சதவிகி தக் குடும்பங்களுக்கு பொருளாதார பாதுகாப்பில்லாத நிலை உள்ளது” என்று அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. 2022 மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதிலும் மொத்தம் 20 மாநிலங்க ளைச் சேர்ந்த 100 மாவட்டங்களில், 1000 நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிரா மப்புற பகுதிகளைச் சேர்ந்த 31 ஆயி ரத்து 510 வீடுகளின் நிதிச்சூழலை ஆராய்ந்து இந்த முடிவுகள் வெளி யிடப்பட்டு உள்ளன.