states

img

கட்டுரையாளர் : சிபிஐ மாநிலத் தலைவர்களில் ஒருவர், திருத்துறைப்பூண்டி

பாரதி புத்தகாலயம் மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை எழுதிய, ‘மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ (மேம்படுத்தப்பட்ட தமிழாக்கம், விளக்கக் குறிப்புகள், கட்டுரைகள்) எனும் நூலை வெளியிட்டுள்ளது. இதன் முன் வெளியீட்டு திட்டத்தை சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதனை எழுத்தாளர் கமலாலயன் பெற்றுக் கொண்டார். ராயல் சைஸ், கெட்டி அட்டையில் 600 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை 400 ரூபாய். முன் வெளியீட்டு திட்டத்தில் 250 ரூபாய்க்கு வழங்கப்படும்.  ஜன.11ஆம் வரை 9444960935 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பாரதி புத்தகா லயம் க.நாகராஜன் தெரிவித்துள்ளார்.