புதுதில்லி,பிப்.8- கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து ள்ள இந்தியர்களின் எண்ணிக்கையோ அல்லது முதலீடு தொகை அளவு குறித்த தரவுகளோ ஒன்றிய அரசிடம் இல்லை என்று நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ’கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஒன்றிய அரசு கணக்கெடுத்து உள்ளதா?’ என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதிலில் , “ கிரிப்டோ கரன்சி யில் முதலீடு செய்யும் இந்தியர்களின் விவரங்கள் ஒன்றிய அரசிடம் இல்லை. மேலும், அவர்கள் முதலீடு செய்துள்ள மதிப்பின் அளவீடு குறித்தும் ஒன்றிய அரசி டம் எந்தத் தகவலும் இல்லை” என தெரி விக்கப்பட்டுள்ளது. இத்தகைய கிரிப்டோ கரன்சிகள் மூலம் வரும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.