புதுதில்லி, பிப்.8 - காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு ஒன்றிய அர சிடம் இருந்து முறையான தகவல்களோ, பதிலோ இல்லை என்றும் என்டிஏ அரசு நோ டேட்டா அவைளபிள் அரசாக உள்ளது என்று மாநி லங்களவையில் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மாநிலங் களவையில் குடியரசு தலை வரின் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் பேசுகையில், 2021 பட்ஜெட்டில் 8.72 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந் தன. தற்போதைய பட்ஜெட் டில் 78 ஆயிரம் வேலை வாய்ப்புகள் மட்டும் நிரப்பப் பட்டுள்ளன. மேலும் பட்ஜெட் டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து தெளிவாக குறிப்பிட வில்லை. சிறு கும்பல் என காங்கிரசை விமர்சித்து பேசிய பிரதமரிடம் காங்கி ரஸ் கேட்கும் கேள்விக்கு பதி லளிக்க முடியவில்லை. ஒன்றிய அரசு எந்த புள்ளி விவ ரங்களை கேட்டாலும் இல்லை என்ற பதிலையே அளிக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியா னோர், கங்கை கரையில் புதைக்கப்பட்ட சடலங்களின் விவரங்கள் எதுவும் இல்லை. கொரோனா ஊரடங் கின் போது நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர் களின் தகவலும் இல்லை. புள்ளிவிவரங்களை தராததால் என்டிஏ அரசை நோ டேட்டா அவைளபிள் அரசு என்று கடுமையாக விமர் சித்தார்.