states

img

நேர்காணல் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு புதிய நடைமுறை துவக்கம்

நேர்காணல் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு

புதிய நடைமுறை துவக்கம்

நாடு முழுவதும் உயர்நீதிமன்ற நீதி பதிகளை நேர்காணல் மூலம் தேர்வு செய்யும் புதிய நடை முறை துவங்கி யுள்ளது.  இதுவரை உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பரிந்து ரை செய்ய 5 நீதிபதி கள் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலிஜி யம், நீதிபதிகளின் பணி விபரங்கள் அடங்கிய குறிப்புகளை பார்த்து மட்டுமே தேர்வு செய்துவந்தன.  தற்போது தில்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணப் பைகள் சிக்கிய நிகழ்வு நீதிபதிகளின் பணி தொடர்பாகவும், நீதித்துறையின் மீதான கேள்வியையும் எழுப்பியதைத் தொடர்ந்து நீதிபதி தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, நீதிபதிகளை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி உள்பட 3 மூத்த நீதிபதிகள் நேர்காணல் நடத்தி பரிந்துரை க்கு, தேர்வு செய்யும் நடைமுறை அம லுக்கு வந்துள்ளது.  தற்போது மத்தியப்பிரதேசம், அல காபாத், பாட்னா உயர் நீதிமன்றங்க ளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப நீதிபதிகளை பரிந்துரைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.  அதற்கான நேர்காணல் கடந்த 2 நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. தற்போது 25 உயர்நீதி மன்றங்களில் 371 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.