இந்திய விமானப்படை நிறுவப்பட்ட தன் 91-ஆம் ஆண்டுதினம் ஞாயி றன்று கொண்டாடப்பட்ட நிலை யில், உத்தரப்பிர தேசத்தின் பிரயாக்யா ராஜ்ஜில் உள்ள பம்ரேலி விமானப் படை தளத்தில் வரு டாந்திர விமானப் படை அணிவகுப்பு விழா நடைபெற்றது. வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்ற விமா னப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி, இந்திய விமானப்படைக்கு புதிய கொடி யை அறிமுகம் செய்தார். புதிய கொடி யில், அசோக சின்னம் மற்றும் இறக்கை களை விரித்தபடி பறக்கும் இமயமலைக் கழுகின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் புதிய கொடி ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் மூலம் வானில் பறக்கவிடப்பட்டது.