புதுதில்லி, ஜூலை 27 - இந்தியா இனவெறி நாடாக மாறும் அபாயத்தில் உள்ளதாக நெல்சன் மண்டேலாவின் பேத்தி நிடிலேகா மண்டேலா வேதனை தெரிவித்துள்ளார். மதவாத மற்றும் சகிப்புத் தன்மையற்ற ஆட்சியாளர்களின் இஸ்லாமோபோபியா என்ற வெறுப்பு நோயால், இந்தியா என்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பில் இன்று அரிப்பு ஏற்பட்டு ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள் ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அவை யில் நெல்சன் மண்டேலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி ஐ.நா. அவையில் பேசிய இங்கிலாந்து இளவரசர் ஹாரி, “நெல்சன் மண்டேலாவின் லட்சிய வாழ்க்கை, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மீது உலக ளாவிய அளவில் தாக்கம் ஏற்படுத்தி யுள்ளது” என்று கூறியிருந்தார். இளவரசர் ஹாரியின் இந்த உரையை மேற்கோள் காட்டி கூறி யிருக்கும் நெல்சன் மண்டேலாவின் மூத்த பேத்தி நிடிலேகா மண்டேலா, “உலகளாவிய அளவில் ஜனநா யகத்தை ஆதரிக்கும் ஒரு முக்கிய மான- ஆனால் தற்போது விரிசல் கண்டுள்ள ஒரு தூண்- ஹாரியின் பேச்சில் இடம்பெறாமல் போய் விட்டது... அந்த தூண்தான் இந்தியா” என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நிடிலேகா மண்டேலா மேலும் கூறியிருப்ப தாவது:
“நிறவெறிக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் போராட்டத் திலும், சிவில் உரிமை இயக்கங் களிலும் கூட ஒரு காலத்தில் குறிப்பிடத் தக்க பங்கை இந்தியா கொண்டி ருந்தது. எழுபத்தைந்து ஆண்டு களுக்கு முன்பு இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதன் அகிம்சைப் போராட்டம் ஆங்கிலேயர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. சுதந்திர இந்தியா எந்த இனமும், மதமும் சிறப்புரிமை கொள்ள முடியாது என்ற ஒரு முன்மாதிரியை வைத்தது. அதன் மாபெரும் தலை வர்களான மகாத்மா காந்தி, மோதி லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்கள், மக்களின் நிறம், மதம் எதுவாக இருந்தாலும் அனை வருக்கும் சமமான மரியாதை என்ற கண்ணியத்தைப் போதித்தார்கள். இதன் காரணமாக, உலகை மிக வும் கண்ணியமாகவும் ஜனநாயக மாகவும் மாற்றப் போராடிய நெல்சன் மண்டேலா போன்ற மனிதர்களுக்கு இந்தியா உத்வேகம் அளித்தது. தென்னாப்பிரிக்காவில், இந்திய முன் மாதிரி மிகவும் முக்கிய மானது. என் தாத்தா நெல்சன் மண்டேலா, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தையும், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களையும் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு, நிற வெறியை எப்படி முடிவுக்கு கொண்டு வரலாம் - எப்படி நாட்டை மாற்றலாம் என்று ஏராளமான உதாரணங்களைப் பெற்றார். எனக்கு நன்றாகத் தெரியும். சுதந்திர இந்தியாவின் தலைமை யானது, மதவாத, சர்வாதிகார அல்லது சகிப்புத்தன்மையற்ற அர சாங்க மாதிரியை நாடியிருக்கலாம். இளம் இந்தியாவோ, அதற்கு பதி லாக ஒரு ஜனநாயக மற்றும் பன்மை த்துவ பார்வையை முன்வைத்தது, இது தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா போன்றோர் கட்டமைக்க முயற்சித்த வானவில் தேசத்திற்கு பெரிதும் காரணமாக அமைந்தது.
ஆனால் இப்போதைய இந்தியா மதவாத, சகிப்புத்தன்மை யற்ற அரசை நாடியிருக்கிறது என்றா லும், 75 ஆண்டுகளுக்கு முன் உலகிற்கு ஜனநாயக மற்றும் பன்மைத்துவ பார்வையை இந்தியா முன்வைத்தது. 75 ஆண்டு களுக்கு முந்தைய இந்தியா இப்போது இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இருந்த இந்தியாவின் ஜனநாயகத்தை இஸ்லாமோபோபியா தற்போது அரித்து வருகிறது. இந்தியாவில் கும்பல் வன்முறை, குடியுரிமை பிரச்சனை, கலப்புத் திருமணங்களுக்கு பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் தேசிய அளவில் இஸ்லாமியர்கள் அதிக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தக் கொள்கைகள் பெரும்பாலும் இந்தியாவின் சிறுபான்மையினரைப் பாதிக்கும் அதே வேளையில், பரந்த உலகத்தையும் பாதிக்கும். நிச்சயமாக, இந்துக்களுக்கு எதிராக பாரபட்சமும் வெறுப்பும் இல்லை என்று சொல்ல முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய அறிக்கை சமூக ஊட கங்களில் கணிசமான ஹிந்து போபியா இருப்பதை எச்சரித்தது. இது இந்துக்கள் மற்றும் சீக்கி யர்களுக்கு எதிரான மதவெறி யின் பொதுவான அலையுடன் ஒத்துப்போவதை ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ். திரு மூர்த்தியும் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் இந்தியாவின் தார்மீக நிலைப்பாடு அனைத்து நம்பிக்கை களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். உலகளவில் அரசாங்கங்கள் மற்றும் சமூகங்கள் மீது இஸ்லா மோபோபியாவின் பிடியை நாம் புறக்கணிக்க முடியாது.
இந்தியாவில் இஸ்லாமோ போபியாவை ஊக்குவிப்பதன் மூலம், மத பிளவுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகளை இந்தியா இழக்கிறது. இது வரும் காலங்களில், அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனை ஏற்படும் போது, கடுமையான விளை வுகளுக்கு இது வழிவகுக்கும். இவை எல்லாவற்றையும் கடந்து மக்களை நகர்த்திச் செல்ல சரியான தலைவர் தேவை. பொரு ளாதார மற்றும் அரசியல் மத்திய ஸ்தத்திற்கு அப்பால், தலைமை தாங்க தார்மீக தலைவர்கள் தேவை. டெஸ்மண்ட் டுட்டு மற்றும் காந்தி போன்ற நம்பிக்கைத் தலை வர்கள் சமாதான செயல்முறை களுக்கு முக்கியமானவர்கள். உதாரணமாக, சில வாரங் களுக்கு முன்பு, சவூதி அரேபியா மதங்களுக்கு இடையேயான உச்சி மாநாட்டை நடத்தியது, அங்கு இந்து மற்றும் முஸ்லிம் தலை வர்கள் ஒன்றாக அமர்ந்தது மட்டு மல்லாமல், சமய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தனர். உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘முஸ்லீம் வேர்ல்ட் லீக்’ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு, முகமது பின் அப்துல்கரீம் அல்-இசாவின் தலைமையில், முஸ்லிம் சகிப்புத்தன்மை மற்றும் மித வாதத்திற்கான குறிப்பிடத்தக்க குரல் எழுப்பப்பட்டது. இந்த உச்சிமாநாடு என் போன்றோருக்கு ஒரு வித்தியாசமான பார்வையை வழங்கியது. இது இந்துவெறி மற்றும் இஸ்லாமோபோபியாவை நிராகரிக்கிறது.
உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையை வைத்திருக் கும் இந்தியா, காலநிலை மாற்ற அபாயங்களால் பாதிக்கப்படக் கூடிய இந்தியா, இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை என்றால் என்ன செய்வது? இஸ்லா மிய வெறுப்பு என்பது வெறும் தார்மீக சீற்றம் அல்ல. இது ஆபத்தானது மற்றும் ஜனநாயக மற்றது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய வெறுப்பு ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பாக இருந்த நாட்டை இன்று சிதைத்துள்ளது. எனவே, முன்னெப்போதையும் விட இந்தியாவின் தார்மீக தைரியம் மற்றும் நீண்ட முரண்பாடுகளுக்கு எதிராக ஒரு சிறந்த உலகத்தை கற்பனை செய்வதற்கான அதன் ஊக்கமளிக்கும் விருப்பமே இப்போதைய தேவை.” இவ்வாறு நிடிலேகா மண்டேலா கூறியுள்ளார்.