states

img

நரேந்திர மோடி அரசு திடீர் பல்டி

‘பாரத்’ ஏற்கெனவே இருப்பதுதான் என  அமைச்சர் அனுராக் தாக்கூர் சமாளிப்பு

‘இந்தியா’ என்ற நாட்டின் பெயரை மாற்றுவதாக வெளியான செய்திகள் வதந்தி மட்டுமே” என, ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். “இந்தியா என்ற பெயரை யார் கைவிட்டது? யாரும் அதை கைவிடவில்லை” என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.

காங்கிரஸ், இடதுசாரி கள், திமுக, ராஷ்ட்  ரிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், திரிணா முல், சிவசேனா, சமாஜ்வாதி உள்  ளிட்ட எதிர்க்கட்சிகள், 2024 மக்கள வைத் தேர்தலுக்கான தங்களின் கூட்டணிக்கு ‘இந்தியா’ (The Indian National Developmental Inclusive Alliance - I.N.D.I.A.) என  பெங்களூருவில் பெயர் சூட்டின. அப்போது முதலே, ‘இந்தியா’  என்பதை உச்சரிக்க மறுத்து, ‘பாரத்’ பெயரையே பாஜக-வினர் பயன்படுத்தி வருகின்றனர். ‘இந்  தியா’ என்ற பெயரைப் பயன் படுத்துபவர்கள், பாரதத்தின் எதிரி கள், இந்தியன் முஜாஹிதீன் அமைப்  பினரும் ‘இந்தியா’ என்ற பெய ரையே பயன்படுத்துகிறார்கள் என்று தாக்குதலையும் தொடுத்தனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்  பகவத், சில நாட்களுக்கு முன்பு  நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்  றில் பேசுகையில், இந்தியாவை ‘பாரத தேசம்’ என்று அழைக்கு மாறு பகிரங்க ‘உத்தரவு’ ஒன்றைப் போட்டார்.  ஆனால், அதற்கு முன்னதா கவே, இந்திய சட்டங்களில், இந்  தியா என்று இருப்பவை அனைத்  தையும் ‘பாரதிய’ என மாற்றி, மோடி  அரசு நாடாளுமன்றத்தில் அண்மை யில் மசோதா தாக்கல் செய்தது. இந்த வரிசையில்தான், ‘ஜி-20’ மாநாட்டிற்கான அழைப்பிதழில், நாட்டிற்கு இருக்கும் ‘இந்தியா’ என்ற பெயரையே மோடி அரசு நீக்கியது. ‘பாரத்’ என அச்சிட்டது. அதாவது ஜி-20 தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்துக்கான அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு-வை திடீரென ‘பாரத குடி யரசுத் தலைவர்’ (President of Bharat) என குறிப்பிட்டது.

இது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புக்கும் கண்டனங்களுக்கும்  உள்ளானது. ‘இந்தியா’ என்ற பெய ரைக் கண்டு பாஜக அஞ்சுகிறது. அதனால்தான் போலி வரலாற்றை உருவாக்க முயற்சிக்கிறது. இஷ்  டத்திற்கு பெயரை மாற்ற, நாடு  ஒன்றும் பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல. ‘இந்தியா’ கூட்டணி யினர், தங்களின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றினால், மோடி அரசு அந்த பெயரையும் மாற்றிவிடும். இஸ்ரோ, ஐஐடி, ஐஐஎம், ரிசர்வ் வங்கி, அது வெளியிட்ட ரூபாய் நோட்டு எல்லாம் இந்தியா என்ற  பெயரைத்தான் தாங்கி நிற்கின் றன. அவற்றையும் மோடி அரசு மாற்றப் போகிறதா? டிஜிட்டல் இந்  தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, நியூ  இந்தியா போன்றவையும் மாறுமா?  என்று எதிர்க்கட்சிகள் அடுக்கடுக் கான கேள்விகளை எழுப்பின.  பொதுமக்கள் தரப்பிலும், ‘இந்  தியா’ என்ற பெயரை மாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர்கள் சமூகவலைதளங்களில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தத் துவங் கினர். இந்த எதிர்ப்பு மேலும் மேலும் வலுக்க ஆரம்பித்தது. இதையடுத்தே, ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர் தனி யார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றும் திட்டத்தை ஒன்றிய  அரசு கொண்டு வர உள்ளதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்திகள் மட்டுமே!” என்று தெரி வித்துள்ளார். “அதை யார் கைவிட்டது? (இந்  தியா என்ற பெயரை)... யாரும் அதைக் கைவிடவில்லை. நீங்கள்  ‘ஜி-20’ பிராண்டிங்கைப் பார்த்தால்  கூட... அது ‘இந்தியா 2023 மற்றும்  பாரத்’ என்றே குறிப்பிட்டு இருக்  கும். கடந்த ஒரு வருடமாகவே இந்த  பிராண்டிங் செய்யப்பட்டு வரு கிறது. அத்துடன், அரசின் அழைப்பி தழ்களில் ‘பாரதம்’ என குறிப்பி டப்படுவது ஒன்றும் பெரிய விஷய மில்லை. இதற்கு முன்பும் ‘பாரத அரசு’ என்ற பெயரில் பல அழைப்பு கள் அனுப்பப்பட்டுள்ளன” என்றும் சமாளித்துள்ளார். மேலும், “நான் பாரத அரசின்  அமைச்சர். பல செய்தி நிறுவனங்க ளின் பெயரில் பாரத் என்று உள்  ளது” என்று குறிப்பிட்டிருக்கும் அனுராக் தாக்குர், “ஆனால், ‘பாரதம்’ என்ற பெயரையே விரும்  பாத இவர்கள் (இந்தியா கூட்டணி  கட்சியினர்) யார்? இவர்கள் ஏன்  பாரதத்தை எதிர்க்க வேண்டும்?; இது அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது, அவர்களின் இதயத் தில் அவர்கள், இந்தியா அல்லது பாரதத்திற்கு எதிரானவர்கள் என் பதே வெளிப்படுகிறது” என்றும் கொதித்துள்ளார்.