பெங்களூரு, மார்ச் 11 - கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், இனாம் தத்தாத்ரேயா பாபா புடங்கிரி தர்கா வைக் கைப்பற்ற, சங்-பரிவாரங்கள் நீண்டகால மாகவே முயற்சித்து வருகின்றன. கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடப்பதால் அது சங்-பரிவாரங்களுக்கு சாதகமாக இருக்கிறது. இந்நிலையில், பாபா புடங்கிரி மலையில், கடந்த புதன்கிழமையன்று துவங்கி நடைபெறு வதாக இருந்த உரூஸ் திருவிழாவிற்கு முடிந்த வரை மாவட்ட நிர்வாகம் மூலமாகவே கெடுபிடி களை விதித்ததாக முஸ்லிம்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் சந்திரதிரி கோண மலையில் உள்ள வழிபாட்டுத் தலம் முஸ்லிம்களுக்கு சொந்தமானதா அல்லது இந்துக்களுக்கு சொந்தமானதா என்பதில் சர்ச்சை உள்ளது. இந்த இடம் பாபா புடங்கிரி என்றும் தத்தாத்ரேய பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. அரசாங்கப் பதிவேடுகளில் இந்த இடம் ஸ்ரீகுரு தத்தாத்ரேய பாபாபுடங் சுவாமி தர்கா என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், இந்த வழிபாட்டுத்தலத்தை முஸ்லிம்கள், இந்துக்கள் என இருதரப்பினருமே சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்துக்கள் இந்த மலையை தத்தாத்ரே யாவின் இறுதி இடமாக கருதுகின்றனர். முஸ்லிம் களோ, சூபி துறவி தாதா ஹயாத் மிர்கலந்தர் இங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்ததாக நம்பு கின்றனர். தென்னிந்தியாவில் சூபித்துவத்தின் ஆரம்ப மையங்களில் ஒன்றாக இங்குள்ள தர்காவை கருதுகின்றனர். உள்ளூர் தோட்டக் காரர்கள் காபி அறுவடைக்கு முன்பு, கோவிலு க்குச் சென்று வழிபடுகின்றனர் என்றால், 17-ஆம் நூற்றாண்டின் சூபி துறவியான பகீர் பாபாபு டன்தான், இந்திய துணைக் கண்டத்தில் முதன் முதலாக காபி விதைகளையே நட்ட பெருமைக் குரியவர் என கூறப்படுகிறது. எனினும், 1998-ஆம் ஆண்டு பாஜக இங்கு ‘தத்தா மாலா அபியான்’ திட்டம் மூலம் கலவர விதைகளை விதைத்தது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்ற போது, “இப்பிரச்சனையில் இருதரப்பினரிடம் பேசி மாநில அரசே இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி இந்த வழிபாட்டுத்தலத்தில் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் தனித்தனியாக பூஜைகள் செய்து கொள்ளவும், அதனை கண் காணிக்க குழு அமைத்தும் மாநில அரசு உத்தர விட்டது. தற்போது இந்தக் கோவிலை நிர் வகிக்க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவினர் வெளியிட்ட வழி காட்டுதல் மற்றும் விதிமுறைகள்படி, இந்துக்கள் கொண்டாடும் தத்தா ஜெயந்தி விழா அண்மை யில்தான் நடந்து முடிந்தது. இந்த நிலையில் பாபாபுதன் கிரி பகுதியில் முஸ்லிம்கள் கொண்டா டும் உரூஸ் திருவிழா புதன்கிழமை துவங்கி 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில்தான், இந்த உரூஸ் திருவிழா வைக் கொண்டாட நிர்வாகக் குழுவினரும், மாவட்ட நிர்வாகமும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறி, உரூஸ் திருவிழா விலிருந்தே ஒதுக்கியிருக்கும் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். “தத்தா ஜெயந்தி விழாவுக்காக இந்துக்க ளுக்கு யாகம், பூஜைகள் நடத்துவதற்கு அனுமதி அளித்து, அர்ச்சகரையும் அரசே நியமித்து கொடுத்தது. அதேபோல் எங்களுக்கான கோரிக் கைகளையும் அரசு நிறைவேற்றி கொடுத்தால்; முக்கியமான கல்லறைகளில் பச்சை நிற ஆடைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி கொடுத்தால், நாங்கள் உரூஸ் திருவிழாவை கொண்டாடுவோம்; இல்லாவிட்டால் உரூஸ் திருவிழாவையே நடத்தப் போவதில்லை” என்று கூறும் நிலைக்கு முஸ்லிம்களை மாவட்ட நிர்வாகத்தினர் தள்ளி விட்டுள்ளனர். பாபாபுடங்கிரி தர்காவைக் கைப்பற்று வதற்காகச் சங்கப் பரிவாரங்கள் மேற்கொண்ட பிரச்சாரங்களை எதிர்த்துக் கர்நாடக சமூக நல்லிணக்க அமைப்பு போராடியது. நீதி, சமத்து வம், அன்பு ஆகியவற்றுக்கான இந்த போராட் டங்களில் பத்திரிகையாளரும் சமூகச் செயற் பாட்டாளருமான கவுரி லங்கேஷ் முன்னணியில் இருந்தார். இந்தப் பின்னணியிலேயே கவுரி லங்கேஷ் கடந்த 2017 செப்டம்பர் 5-ஆம் தேதி வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.