புதுதில்லி, பிப். 4 - ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்து வந்த ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலை வர் முகேஷ் அம்பானி தற்போது இரண்டா வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி ஒட்டுமொத்த ஆசியச் சந்தையிலும் மிகப்பெரிய பணக்காரராக இருந்து வந்தார். சீனாவின் அலிபாபா மற்றும் டெக் நிறுவனத் தலை வர்கள் இந்த இடத்திற்குப் போட்டி போட்டாலும், சீன அரசின் கட்டுப்பாடு களும், விதிமுறைகளும் சீனப் பணக் காரர்களின் சொத்து மதிப்பை பெரிய அள வில் குறைத்தது. முகேஷ் அம்பானி B2B வர்த்த கத்தில் B2C வர்த்தகத்தில் அதிகப்படி யான கவனத்தைச் செலுத்தி வரும் கார ணத்தால் சீனா பணக்காரர்களைக் காட்டி லும் முகேஷ் அம்பானியின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. இதனால் ஆசி யாவின் மிகப்பெரிய பணக்காரராக மட்டும் அல்லாமல் உலகப் பணக்காரர் கள் பட்டியலிலும் தொடர்ந்து முதல் பத்து இடங்களுக்கு உள்ளேயே இருந்து வந்தார். இந்நிலையில், முகேஷ் அம்பானியை, மற்றொரு இந்தியரும், பிரதமர் மோடி யின் நண்பருமான கவுதம் அதானி முந்தி யுள்ளார். வியாழக்கிழமை வர்த்தகநேர முடிவில் அதானி குழுமத்தின் தலைவ ரான கவுதம் அதானி மற்றும் அவரது குடும் பத்தின் சொத்து மதிப்பு 290 மில்லியன் டாலர் சரிந்தாலும், 90.4 பில்லியன் டாலர் மதிப்புடன் ஆசியாவின் முதற்பெரும் பணக்காரராக மாறியது மட்டுமல்லாமல், உலகப் பணக்காரர்கள் பட்டியலிலும் 10-ஆவது இடத்தை பிடித்தார். ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ குழு மத் தலைவர் முகேஷ் அம்பானி 89.6 பில்லி யன் டாலர் சொத்து மதிப்புடன் ‘டாப் 10’ பட்டியலில் இருந்து வெளியேறி 11-ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளார்.