‘குஜராத்திகளாகிய நாங்கள் பழகிவிட்டோம்’
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் “திருடர் மோடி” என்ற கருத்து குஜராத் மக்களிடையே எவ்வித சர்ச்சையையும், எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில், ‘மோடி’ பெயருடைய சமூகத்தினர் கூட இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம், 2001-ஆம் ஆண்டு முதல் நாங்கள் (குஜராத் மக்கள்) மோடியின் மிகவும் மோசமான அருவருப்பான மற்றும் கலாச்சாரமற்ற கருத்துகளுக்குப் பழகிவிட்டோம் என்பதுதான்.
- தீபால் திரிவேதி, குஜராத் பத்திரிகையாளர்
புதிதில்லி மார்ச், 26- சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் மிக மிக இழிவாகப் பேசிய வர்தான் பிரதமர் நரேந்திர மோடி என்று குஜராத் பெண் பத்திரிகையாளர் தீபால் திரிவேதி அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மக்கள வைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 2019 ஏப்ரல் 13 அன்று கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என அனைத்துத் திருடர்களின் பெயர்களிலும் மோடி என்று ஏன் இருக்கிறது” என்று நையாண்டியாக கேள்வி எழுப்பினார். ராகுலின் இந்தப் பேச்சு, பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த ‘மோடி’ சமூகத்தினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக பாஜக எம்எல்ஏ-வும், குஜராத் முன் னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ் திரேட் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2023 மார்ச் 23 அன்று தலைமை ஜூடிசி யல் மாஜிஸ்திரேட் நீதிபதி எச்.எச்.வர்மா, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 504-இன் கீழ் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்ட னை வழங்குவதாக தீர்ப்பளித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையிலேயே மோடி அரசானது, தீர்ப்பு வந்த வெறும் 2 மணிநேரத்தில் அதிவிரைவாக ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்துள்ளது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ள நிலையில், பாஜகவின் இந்த ஜனநாயகமற்ற இந்த செய லுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் தெரிவித்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறி விக்கப்பட்ட உடனேயே அவர்களின் பதவியைப் பறிப்பது, இந்திய அரசி யலமைப்பு மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையைப் பறிப்பதாக உள்ளது என்றும், எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(3) அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் பெண் பத்திரிகையாளரும், “வைப்ஸ் ஆப் இந்தியா” ஊடக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், ஆசிரியருமான தீபால் திரிவேதி, ராகுல் காந்தி பேசியது நையாண்டியானது; ஆனால், பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில், மிகமிகக் கொச்சையான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
நான் 2001-ஆம் ஆண்டு முதல் “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகையின் நிருபராக இருந்த காலத்திலிருந்தே குஜ ராத்தில் சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான ரதயாத்திரையின் பல்வேறு நிகழ்வுகள், பாஜகவினரின் பேச்சுக்களை தொகுத்து உள்ளேன். 2001ஆம் ஆண்டு முதல் (மோடி ஆட்சிக்கு வந்த பின்பு) குஜராத் மாநி லத்தில் பொதுச் சொற்பொழிவுகளில் கண்ணியம் மரணிப்பதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். அதற்கு முன் பாஜக ஆட்சியில் இருந்த போதி லும் இந்த அளவுக்கு பொதுச் சொற் பொழிவுகளில் கண்ணியத்திற்கு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. 1998-ஆம் ஆண்டு குஜராத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது அப்போதைய பிரதமர் வாஜ்பாயி டம் பாஜகவுக்கான அவரது கனவு என்ன என்று ஒருமுறை கேட்டேன். இந்தியாவை பாஜக ஆட்சி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஆனால் நாங்கள் மகாத்மா காந்தியின் நிலத்தில் இருந்து தொடங்கியுள்ளோம். குஜராத் எங்களுக்கு சிறப்பு. மகாத்மா காந்தி வகுத்த கொள்கைகளை பின்பற்றுவோம்’’ என்று யதார்த்தமாக கூறினார். ஆனால் மோடி குஜராத் முதல் வராக பொறுப்பேற்பதற்கு முன்பும், பொறுப்பேற்ற பிறகும் அவர் பேசிய பொதுப் பேச்சுக்களில் கண்ணியத்தை படுகொலை செய்ததற்காக மோடியைத் தவிர வேறு யாருக்கும் முடிசூட்டப்பட முடியாது. 2001-ஆம் ஆண்டு முதல் அவ்வளவு மோசமாக பேசினார்.
‘கௌரவ் யாத்திரை’யில் இழி பேச்சு
மோடி குஜராத் முதல்வராக ஆட்சி யில் அமர்ந்து அடுத்த ஓராண்டில் 2002-ஆம் ஆண்டு கௌரவ் யாத்திரையில் இஸ்லாமிய மக்களை மிக இழிவாகப் பேசினார். ‘‘இப்படி இருந்தால் நாடு எப்படி வளரும்? முஸ்லிம்கள் நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்கின்றனர். இதன் விளைவாக அவர்களுக்குப் பல குழந்தைகள் இருக்கின்றனர்’’ கூறினார். மேலும், ‘‘குஜராத் பெண்கள் ஊட்டச்சத்து குறை பாடு உள்ளவர்கள் என்ற கருத்து தவ றானது. நம்முடைய பெண்கள் உரு வத்தில் மிகுந்த அக்கறை கொண்ட வர்கள். அதனால் அவர்கள் ஒல்லியாக இருக்க விரும்புகிறார்கள்’’ என நாகரீ கமற்ற முறையில் விளக்கம் அளித்தார். இந்த கௌரவ் யாத்திரையின் வீடியோ யூடியூப் முன்பு இணையதளத்தில் இருந்தது; ஆனால், பிரதமராக மோடி வந்த பின்பு யூடியூப் நீக்கம் செய்யப்பட்டு விட்டது. தேடினாலும் கிடைக்கவில்லை. ‘ஜெர்சி மாடு, கலப்பின கன்று’ தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு குஜ ராத்தில் மோடி, ‘‘சோனியா பென் டூ ஏக் ஜெர்சி கே சே’’ என்றும், ‘‘ஆ ராகுல் ஏக் ஹைப்ரிட் வச்சர்டு சே (சோனியா பென் ஒரு ஜெர்சி மாடு, மற்றும் ராகுல் ஒரு கலப்பின கன்று)’’ என்றும் குறிப் பிட்டார். மோடியின் இந்த இழிவான பேச்சை அமைதியாக விழுங்கியதற்காக சோனியா காந்திக்கு நாம் அதிக மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.