states

img

11-ஆவது நாளாக தொடரும் நாடாளுமன்ற முடக்கம்!

புதுதில்லி, மார்ச் 28 - அதானி ஊழல், ராகுல் காந்தி  தகுதி நீக்க விவகாரம் செவ்வாயன்றும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மோடி அரசு விவாதத்திற்கு அனுமதி மறுத்ததால், 11-ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. அதானியின் ரூ. 17 லட்சத்து 80  ஆயிரம் கோடி பங்குச் சந்தை முறை கேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும், இவ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதற்காக ராகுல் காந்தியை எம்.பி. பதவியிலிருந்து நீக்கி மேற்கொள் ளப்பட்ட அரசியல் பழிவாங்கலைக் கண்டித்தும், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக,  ராஷ்ட்ரிய ஜனதாதளம், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜன தாதளம், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஆம் ஆத்மி என 18 எதிர்க்கட்சிகள் இப்போராட்டத்தில் இணைந்துள்ளன.

ஆனால், ஒன்றிய பாஜக அரசு  அதானியின் ஊழல் குறித்த விசார ணைக்கு உத்தரவிட முடியாது என்று  பிடிவாதமாக மறுத்து வருவதால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு கள் முழுமையாகவே முடங்கியுள் ளது. 10 நாட்களாக அவை நடவடிக்கை கள் நடைபெறவில்லை. செவ்வாயன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக செய்தியாளர் களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி.யும், நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினருமான மணீஷ் திவாரி, “அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச் சாட்டுகளை நாடாளுமன்ற நிலைக் குழு ஆராய பரிந்துரை செய்யுமாறு பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹாவுக்கு (நிலைக்குழுத் தலைவர்) கடிதம் எழு தியுள்ளேன். இவ்விவகாரத்தில், செபி, ரிசர்வ் வங்கி, எல்ஐசி, கார்ப்பரேட் விவ கார அமைச்சகம் மற்றும் பிற ஒழுங்கு முறை அமைப்புகளின் அதிகாரிகளை அழைத்து விசாரிக்க வேண்டும்” என்று கூறினார். “ஒன்றிய அரசு நாடாளுமன்றம் செயல்படுவதை விரும்பவில்லை. அதானி, ராகுல் காந்தி, ஜனநாயகம் போன்ற பிரச்சனைகளை எதிர்க்கட்சி கள் எழுப்பும் போது அவர்களின் குர லை நசுக்க விரும்புகிறார்கள்” என்று  சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார்.

ஒன்றிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “பிரதமர் மோடி யை அவமதிக்கும் வகையில், ஒட்டு  மொத்த ஓபிசி சமூகத்தையும் ராகுல்  காந்தி அவமதித்துள்ளார். பழங்குடி யின குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒரு வர் (திரவுபதி முர்மு) குடியரசுத் தலை வரான போது, சோனியா காந்தி குடும்பத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவரை காங்கிரஸ் தலைவர் ஒருவர் அவமதித்தார்” என்று பழிபோட்டார். இந்நிலையில், காலை 11 மணியள வில் நாடாளுமன்றம் கூடியபோது, வழக்கம்போல அதானி விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க் கட்சிகள் முழக்கமிட்டன. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக, நாடாளு மன்றத்தின் இரு அவைகளுமே பிற் பகல் 2 மணிவரையும், பின்னர் நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன. ராகுல் பதவி பறிப்புக்கு எதிராக, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திங்களன்று கறுப்பு உடையுடன் நாடாளுமன்றத் திற்கு வந்தனர். இந்நிலையில், அப்போராட்டத்தின் தொடர்ச்சியாக செவ்வாயன்று மாலை தில்லி செங் கோட்டையில் இருந்து டவுன்ஹால் வரை ‘தீப்பந்த பேரணி’ நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. மறுபுறத்தில், மோடி குறித்த பேச்சு மூலம் ராகுல் காந்தி பிற்படுத்தப் பட்டவர்களை இழிவுபடுத்திவிட்ட தாகக் கூறி, பாஜக ஓபிசி எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.  நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் ஆளும் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், வடகிழக்கு மாநி லங்களில் நடந்த சட்டப் பேரவை தேர்த லில் பாஜக பெற்ற வெற்றிக்காக பிர தமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.