புதுதில்லி, மே 29- புதிய நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்த முயன்ற மல்யுத்த வீரர் - வீராங்கனை கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை வரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலி யல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மல் யுத்த முன்னணி வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் இரண்டாம் கட்டமாக தில்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் கடைசி வாரம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிஜ் பூஷண் மீது எப்ஐஆர் பதியப்பட வேண்டும் என்று கோரி 7 மல்யுத்த வீராங்கனை கள் குழு கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக் கல் செய்த பின்பே, தில்லி காவல் துறையினர் பிரிஜ் பூஷண் மீது 2 பிரிவுகளில் (ஒன்று போக்சோ) வழக்குப்பதிவு செய்தனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தாலும், பிரிஜ் பூஷண் மீது எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை. போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இது வரை கைது செய்யப்படவும் இல்லை.
இதனால் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இடை விடா போராட்டம் நடத்தி வருகின்றனர். மே 23 அன்று மல்யுத்த மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்திய நிலையில், ஞாயிறன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாக செல்ல மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் திட்ட மிட்டிருந்தனர். ஆனால் பேரணி செல்ல தயா ராகும் பொழுதே மல்யுத்த வீரர் - வீராங்கனை களை தில்லி போலீசார் குற்றவாளிகளை போல் இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக கைதுசெய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனைகளை கைது செய்ததை சாதகமாக பயன்படுத்தி போராட்டக் களத்தை தில்லி காவல்துறை அப்புறப் படுத்தியுள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை களை பேருந்துகளில் ஏற்றிய பிறகு, அந்த இடத்திலிருந்த அவர்களது உடைமைகளை அகற்ற காவல்துறை உத்தரவிட்டது. தொடர்ந்து கூடாரங்கள், கட்டில், குளிரூட்டிகள், பாய்கள், தார்பாய்களை போலீசார் பலவந்தமாக அகற்றி பொருட்களை லாரிகளில் ஏற்றிச் சென்றனர். இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உட்பட போராட்டத்தில் பங்கேற்ற வீரர் - வீராங்கனை கள் பலர் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், போலீ சாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. மேலும் மல்யுத்த வீரர் - வீராங்கனை களுக்கு ஆதரவாக விவசாயிகளும் தில்லி எல்லைப்பகுதியில் போராட்டத்தில் குதித்த னர். புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு எதிரே போராட்டத்துக்காக புறப்பட்ட 700 விவசாயி கள் மீதும் தில்லி போலீசார் கைது செய்த னர்.
போலிப் புகைப்படத்தை காட்டி பாஜக வன்மம்
தில்லியில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளில் சங்கீதா போகத், வினேஷ் போகத் ஆகியோர் காவல்துறை வாகனத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில். “இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து, அதில் ஒன்று உண்மையானது, மற்றொன்று மார்பிங் செய்யப்பட்டு மல்யுத்த வீராங்கனைகள் சிரிப்பது போன்று மாற்றப்பட்டு இருப்பதை காட்டுகிறது. வைரல் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிவிட்டது. இந்த புகைப்படங்களை பாஜக தொடர்புடைய ஐடி விங்தான் பரப்பி வருகிறது. இதனை பதிவிட்ட நபர் மீது புகார் அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.