புதுதில்லி, மார்ச் 24- ரயில்வேயில் மொத்தம் 3 லட்சத்து 11 ஆயிரத்து 438 இடங்கள் காலியாக இருப்பதாகவும், இதில் தென்னக ரயில்வேயில் மட்டும் 22 ஆயிரத்து 357 இடங்கள் காலியாக இருப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மக்கள வை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, பி.ஆர்.நடராஜன், ரயில்வேயில் சுமார் 3 லட்சத்து 12 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதால் ரயில்வே துறை செம்மையாகச் செயல்பட முடியாமல் தத்தளித்துக்கொண்டி ருப்பதாகக் கூறப்படுகிறதே, அதற் கான காரணங்கள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரயில்வேயில் 2022 டிசம்பர் 1 அன்று, மொத்தம் 3 லட்சத்து 11 ஆயிரத்து 438 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதில் தென்னக ரயில்வேயில் மட்டும் 22 ஆயிரத்து 357 இடங்கள் காலியாக இருக்கின்றன. ரயில்வேயில் பணியிடங்கள் காலியாவதும் அவற்றை நிரப்புவதும் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும். இப்பணியிடங்களும் பின்னர் நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். (ந.நி.)