states

img

நாடாளுமன்றத்தை ஜூலை 24 வரை ஒத்திவைத்தது மோடி அரசு!

புதுதில்லி, ஜூலை 21 - மணிப்பூர் விவகாரம் குறித்து, பிரதமர்  மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மறுத்து தொடர்ந்து பிடிவாதம் காட்டி வரும் நிலையில், இவ்விவகாரம் நாடாளு மன்றத்தில் இரண்டாவது நாளாக அனலைக் கிளப்பியது.  80 நாட்களாக பற்றியெரியும் சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க மறுத்து ஓடி  ஒளிவது ஏன்? நாடாளுமன்றத்தில் அறிக்கை  தாக்கல் செய்வதில் என்ன பிரச்சனை? என்று கேள்விகளை முன்வைத்து, காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பிய நிலையில், மோடி அரசு வழக்கம் போல நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளது.  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் துவங்கின. அப்போது இரண்டு அவைகளிலுமே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தைக் கிளப்பினர்.

ஆயிரத்திற்கும் அதிகமான திரண்ட வன்முறைக் கும்பல், குக்கி- ஜோமி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த 2 பெண்களை, மனிதத் தன்மையற்ற வகையில் நிர்வாணமாக இழுத்துச் சென்றும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டும், வல்லுறவுக்கு உள்ளாக்கிய கொடுமை உலகளவில் இந்தியாவிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வழக்கமான நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, மணிப்பூர் சட்டம் - ஒழுங்கு குறித்த விவகாரத்தை விவா தத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மக்களவையில் விதி எண் 193-இன் கீழ் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. இதேபோல், மாநிலங்களவையிலும் விதி எண்: 176 மற்றும் விதி எண்: 267-இன் கீழ்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரமோத் திவாரி, மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டாக்டர் ஜான்  பிரிட்டாஸ், திமுக எம்பி திருச்சி சிவா, ஆம்  ஆத்மி எம்.பி.க்கள் சஞ்சய் சிங்,  ராகவ் சத்தா, திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரை யன் உள்ளிட்டோர் நோட்டீஸ் அளித்திருந்த னர். ஆனால், மணிப்பூர் விவகாரத்தை விவா திக்க, நாடாளுமன்றத்தில் இரு அவைகளி லும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆவேசமடைந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மணிப்பூர் மற்றும் ஒன்றிய பாஜக அரசுகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்களுக்கு நீதி கேட்டும் முழ க்கங்களை எழுப்பினர். அமளிக்கிடையே பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “மணிப்பூர் சம்பவம் மிகவும்  தீவிரமானது, நிலைமையை புரிந்து கொண்டு, ‘மணிப்பூரில் நடந்த சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது’ என்று பிரதமரே கூறி யுள்ளார்.

ஒரு சில அரசியல் கட்சிகள் தேவை யில்லாமல் மணிப்பூர் பற்றிய விவாதம்  நடக்காத வகையில் இங்கு ஒரு சூழ்நிலை யை உருவாக்க நினைக்கின்றன. எதிர்க்கட்சி கள் மணிப்பூர் மீது தீவிர அக்கறை காட்ட வில்லை என்ற குற்றச்சாட்டை நான் தெளி வாக முன்வைக்கிறேன்” என்றார். இதனால்,  அவையில் கூச்சம் குழப்பம் ஏற்படவே, மக்க ளவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது.  12 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்தது. கைகளில் பதாகைகளுடன் எம்.பி.க்கள் சிலர் சபாநாயகர் இருக்கை முன்பாக முழக்கங் களை எழுப்பினர். சிறிது நேரம் அமளிக்கு  இடையே அவை அலுவல்கள் நடை பெற்றன. எனினும் கூச்சலும் குழப்பமும் நிலவியதால், ஜூலை 24 காலை வரை மக்களவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதேபோல மாநிலங்களவையிலும், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ  பிரையன் எழுந்து, பிரதமர் மற்றும் மணிப்பூர் குறித்து பேசக்கூடாதா? எதிர்க்கட்சியினரின் கேள்விகளை அவைக் குறிப்புகளில் இருந்து  ஏன் நீக்க வேண்டும்? என மாநிலங்கள வைத் தலைவர் ஜகதீப் தன்கரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்காத தன்கர், அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2.30 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.