states

img

கேரளத்தின் பொருளாதார நெருக்கடிக்கு ஒன்றிய அரசின் கொள்கைகளே காரணம்

திருவனந்தபுரம், நவ. 9- “ஒன்றிய அரசின் பல்வேறு கொள்கைகளே கேரளம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்க டிக்கு காரணம்” என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.  “ஒன்றிய அரசின் தரப்பிலிருந்து தீவிர நிதித் தாக்குதல்கள் வரு கின்றன, ஆனால் அரசு உரிய தலை யீடுகளுடன் அதைச் சமாளிக்கும்” என்றும் பினராயி விஜயன் தெரி வித்துள்ளார். புதனன்று (நவ.8) திருவனந்த புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது:  கேரள அரசாங்கம் நிதிப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் கடுமையான நிதித் தாக்குதல்களை மாநிலங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால், வரி வசூலிப்பதில் மாநி லங்கள் பெருமளவு அதிகாரத்தை இழந்துள்ளன.  

பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்களுக்கு வரி விதிக்கும் உரிமை சுருக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதங்கள் மீதான உச்சவரம்பு நிர்ணயம் மற்றும் வருவாய் நடுநிலை விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பு ஆகியவை கேரள வருவாய் மீதான தாக்குதலாக உள்ளது. இந்த ஆண்டு ஒன்றிய அரசிடம் இருந்து பெற்ற தொகை மற்றும் கடன்  விகிதத்தில் ரூ.57ஆயிரத்து 400 கோடி பற்றாக்குறை உள்ளது. ரூ.19 ஆயிரம் கோடி கடன் அனுமதி மறுக்கப் பட்டது. கடந்த ஆண்டை விட வருவாய் பற்றாக்குறை மானியத்தில் ரூ.8ஆயிரத்து400 கோடி ரூபாய் குறைவு. ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கிய ரூ.12 ஆயிரம் கோடி இப்போது இல்லை. இத்தனை பிரச்சனைகள் இருந்தும் நலத்திட்டத்தில் இருந்து விலகும் எண்ணம் கேரள அரசுக்கு இல்லை. இலவசங்கள் கூடாது என்பதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது. இது ஏற்கக்கூடியது அல்ல. வளர்ச்சிப் பணிகளுக்கு எந்தக் குறையும் இருக்காது. அரசு மிகவும் கவனமாக நிதி  மேலாண்மை மூலம் இந்தப் பிரச்சனை களை சமாளிக்க முயற்சிக்கிறது. முந்தைய ஆண்டை விட சொந்த வரி  வருவாயை அதிகரிக்க முடிந்துள்ளது. கேரளத்தில் வருவாய் பற்றாக்குறை 1 சதவிகிதத்துக்கும் கீழ் சரிந்தது வர லாற்றில் இதுவே முதல் முறை. இது போன்ற உறுதியான நடவடிக்கை களுடன் கேரளம் முன்னேறும். பிரச்சனைகள் உள்ளதால், அரசின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை தள்ளிப்போட முடியாது. கலாச்சாரத் துறையில் செல விடப்படும் பணத்தை வீணாகவும், தேவையற்றதாகவும் சித்தரிக்கும் முயற்சியை ஏற்க முடியாது. நாட்டின் மேம்பாட்டுக்கான செலவுகளை ஊதாரித்தனமாக பார்க்க முடியாது. இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.

ஆளுநர் பிடித்த முயலுக்கு 3 கால்களா?

மசோதாக்களில் கையெழுத்திடும் விவகாரத்தில் ஆளுநர், ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்’ என்கிற போக்கைக் கொண்டுள்ளார். ஆளுநரை நேரடியாகச் சந்தித்தேன். மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர்களும் நேரடியாகவே விளக்கம் அளித்தனர்.  எல்லாவற்றிற்கும் மேலாக, இதுபோன்ற செயல்களைச் செய்வது ‘ஆளுநரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின்’ ஒரு பகுதியாக இருக்கலாம். தேவையில்லாமல் மசோதாக்களை தாமதப்படுத்துவது சரியான நடவடிக்கை அல்ல. அரசமைப்பு சாசனத்தின்படி செய்ய வேண்டியதை ஆளுநர் செய்யவில்லை. அரசாங்க த்தை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இதன் பின்னணியில் இருக்கலாம்  என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.