நெல்லூர், செப்., 10- ஆந்திரப் பிரதேச முன் னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, முதல்வ ராக இருந்த 2014 முதல் 2017 வரையிலான காலகட்டத் தில் திறன் மேம்பாட்டு கழ கத்தில் ரூ.371 கோடி ஊழல் செய்ததாக 4 ஆண்டுகளுக்கு முன் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சனிக் கிழமையன்று அதிகாலை நந்தியாலாவில் சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் அமைச்சர் கண்ட ஸ்ரீநிவாச ராவை சிஐடி போலீஸார் கைது செய்தனர். விஜய வாடாவில் உள்ள சிஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஞாயி றன்று காலை விஜயவாடா வில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட் டார். சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி மாநில குற்ற புலனாய்வு துறை தரப்பில் முறையிடப்பட்டது. 6 மணி நேர வாதத்திற்குப் பின்னர் செப்.22 வரை நீதி மன்ற காவல் விதித்து, அவரை ராஜமுந்திரி சிறை யில் அடைக்க விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆந்திராவில் பதற்றம் அதிகரித்துள்ளது.