மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறைகூவல்
புதுதில்லி, அக்.30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள ஏ.கே.கோபாலன் பவனில் அக் டோபர் 27-29 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கட்சி வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கேரளா-வெடிகுண்டு தாக்குதல்:
எர்ணாகுளத்தில் கன்வென்ஷன் சென்டரில் துரதிர்ஷ்டவசமாக மூன்று பேர் கொல்லப்படவும் பலர் காயம் அடை யவும் இட்டுச்சென்றுள்ள வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. மாநிலக் காவல்துறையினர் சந்தேகத் திற்கிடமான ஒரு நபரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இதற்கிடை யில் ஒன்றிய அமைச்சர் ஒருவர் உண்மை களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், சமூக ஊடகங்களில் கேரளாவிற்கு எதி ராகவும் அதன் மக்களுக்கு எதிராக வும் மதவெறிச் சேற்றை வாரி வீசி யுள்ளதற்கு மத்தியக்குழு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. கேரள மக்கள், எப்போதும் போல், கேரளாவின் தனித்துவமான மற்றும் இணையற்ற சமூக மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்திடும் நபர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்திட வேண்டும் என்று மத்தியக்குழு அறைகூவல் விடுக்கிறது.
இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் மீது ஏவியுள்ள இனப்படுகொலைகள்
பாலஸ்தீனத்தின் மீதான தாக்கு தலை மனிதாபிமானமுறையில் நிறுத்தி வைத்திடவும், அனைத்து மக்களையும் காத்திடவும், உடனடியாக மனிதாபிமான முறையில் உதவிகளை அனுப்பி வைத்தி டவும் ஐ.நா.பொது மன்றம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மோடி அரசாங்கம் ஆதரவு அளிக்க மறுத்திருப்பதை மத்தியக்குழு கடுமையாகக் கண்டனம் செய்கிறது. மோடி அரசாங்கம் அந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் புறக்கணித்திருப்பதும், ஏகாதிபத்திய போர் வெறியர்களுடன் சேர்ந்து கொண்டு, பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா காலங்காலமாக பாரம்பரியமாக அளித்துவந்த ஆதரவுக்கு எதிராகவும் சென்றிருக்கிறது. ஐ.நா. தீர்மானத்தில் கோரியுள்ள வேண்டுகோள்களுக்கு மத்தியக்குழு, இஸ்ரேலால் சர்வ தேச சட்டங்களுக்கு எதிராக கொடூர மாக மேற்கொண்டுள்ள இனப்படு கொலை யுத்தத்திற்கு எதிராக அவ திக்குள்ளாகியிருக்கும் பாலஸ்தீன மக்க ளுக்கு ஆதரவாக தன் ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது. இதுவரை 8000 பேர் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். இவர்களில் 4000 பேர் குழந்தைகள். இந்த எண்ணிக்கை நாளும் அதிகரித்துக் கொண்டிருக் கிறது. கொல்லப்படுவோர் குறித்த விவ ரங்கள் காசாவில் மட்டுமல்ல, மேற்குக் கரையிலிருந்தும் வந்துகொண்டி ருக்கிறது. போர் நிறுத்தத்தை இஸ்ரேல் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், ஐ.நா. கட்டளையிட்டுள்ளபடி 1967க்கு முந்தைய எல்லைகளுடன் பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலத்தை அறிவித்து, இரண்டு நாடுகள் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப் பட வேண்டும் என்பதற்காக உலகம் முழு வதும் நடைபெற்றுவரும் கிளர்ச்சிப் போராட்டங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் தன்னை இணைத்துக் கொள்கிறது.
சட்ட மன்றத் தேர்தல்கள்
சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற வுள்ள ஐந்து மாநிலங்களில் நான்கு மாநி லங்களின் நிலைமை குறித்து மத்தியக் குழு விவாதித்தது. ராஜஸ்தானில், மாநிலக்குழு வால் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பி னர்களாக இருக்கக்கூடிய இருவர் உட்பட 17 வேட்பாளர்களை கட்சியின் சார்பாக முன்மொழிந்திருப்பதற்கு, மத்தியக்குழு ஒப்புதல் அளிக்கிறது. சட்டீஸ்காரில் மூன்று இடங்களில் கட்சி போட்டியிடுகிறது. மத்தியப் பிரதேசத்தில் நான்கு இடங்களி லும் கட்சி போட்டியிடுகிறது. தெலுங்கானா வில் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன.
மணிப்பூர்
மணிப்பூரில் நிலைமை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருந்து வரு கின்றன. இது, நிலைமையைக் கட்டுப்படுத்து வதில் மோடி அரசாங்கமும் பாஜக-வின் இரட்டை என்ஜின் அரசாங்கமும் முழுமை யாகத் தோல்வி அடைந்திருப்பதையே தெளி வாகக் காட்டுகிறது. மாநிலத்தில் உள்ள பல்வேறு இன மக்கள் மத்தியில் மத அடையாளங்களுடன் மதவெறிச் சாயம் பூசப்பட்டுக்கொண்டிருக்கிறது. மாநிலக் காவல்துறையினர் 175 பேர் இறந்துள்ள தாக அறிவித்துள்ளார்கள். (உண்மையில் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்). 96 பேரின் சடலங்கள் இன்னமும் எவராலும் கோரப்படாமல் இருக்கின்றன. 32 பேர் காணப்படவில்லை என்று அதி காரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டி ருக்கிறது. 4,786 வீடுகள் மற்றும் 386 மதம்சார்ந்த இடங்கள் உட்பட 5,172 இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டி ருக்கின்றன என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் 5,668 துப்பாக்கிகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இவற்றில் 1,329 மட்டுமே இதுவரை மீட்கப் பட்டிருக்கின்றன. முதலமைச்சர் பைரேன் சிங் உடனடி யாக நீக்கப்பட வேண்டும். மணிப்பூரில் நடை பெற்றுவரும் வன்முறை வெறியாட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மக்கள் மீதான பொருளாதாரச் சுமைகள்
மோடி அரசாங்கத்தின் பொய்ப்பிரச்சார எந்திரம் கட்டவிழ்த்துவிடும் சரடுகளை முறி யடித்து, விலைவாசிகளும் வேலை யின்மையும் கட்டப்படுத்தமுடியாத அள விற்கு உயர்ந்து, மக்களின் வருமானத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2020-21க்கும் 2022-23க்கும் இடையே மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.5 விழுக்காட்டி லிருந்து 5.1 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இது ஒவ்வொரு குடும்பத்தையும் கடன்வலைக்குள் விழுவதைக் கூர்மையான முறையில் அதிகரித்திருக்கிறது. வெங்காயத்தின் விலை விண்ணை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம், தொடர்ந்து புறக் கணிக்கப்பட்டு, கிராமப்புற வறுமைக்கு இட்டுச்சென்றிருக்கிறது. உலக பட்டினி அட்ட வணையில் இந்தியா 125 நாடுகளில் தற்போது 111ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒரே நாடு - ஒரே தேர்தல்
ஒன்றிய அரசாங்கத்தால் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு இந்த முன்மொழிவினை அமல்படுத்தப்படுவதை ஆய்வு செய்வ தற்காக இப்போது அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கோரி இருக்கிறது. 2024 ஜனவரி 18க்குள் எழுத்துப்பூர்வ மாக கருத்துக்களை அனுப்பவேண்டும் என்று கேட்டிருக்கிறது. அதன்பின்னர் ஒருசில மாதங்களில் பொதுத்தேர்தல் வருவதை மனதில் கொண்டு இவ்வாறு அது கேட்டி ருக்கிறது. இந்த முன்மொழிவிற்கு எதிராக மத்தியக் குழு மிகவும் தெள்ளத்தெளிவான நிலையினை எடுத்திருக்கிறது. இந்த முன்மொழிவானது நம் அரசமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் கூட்டா ட்சித் தத்துவம் ஆகிய இரண்டின்மீதும் ஏவப்பட்டுள்ள இரட்டைத் தாக்குதலாகும். அரசமைப்புச் சட்டத்திற்கு, குறிப்பிடத்தக்கவிதத்தில் திருத்தங்களைக் கொண்டுவராமல், இத்தகைய முன்மொ ழிவு கொண்டுவரப்பட்டால் அது மாநில சட்ட மன்றங்களின் ஆயுட்காலத்தை வெட்டிச் சுருக்கிடும் அல்லது நீட்டித்திடும். சட்ட மன்றத்தில் ஓர் அரசாங்கம் தன் பெரும் பான்மையை இழக்குமானால், அதன்பின்னர் அது தொடர்ந்திருப்பது சட்டவிரோதமாகும். மக்கள் தங்களுக்கான மாநில அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுத்து, அங்கே ஒன்றிய ஆட்சி திணிக்கப்பட்டால், ஜனநாயக விரோதமானதாகவே அமைந்திடும்.
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021இல் மேற்கொள்ளப்படவேண்டியது இதுவரை மேற்கொள்ளப்படாமல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனை மேலும் காலம் தாழ்த்தாமல் நடத்திடவேண்டும். அவ்வாறு நடத்தும் போது மக்களின் சமூக பொருளாதார நிலையை அறிவதற்காக சாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்று மோடி அரசாங்கத்தை மத்தியக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இட ஒதுக்கீடு உட்பட சட்டப்பூர்வமான பல தேவைகளை உத்தரவாதப்படுத்துவதற்கு சாதி அடிப்ப டையிலான கணக்கெடுப்பு அவசியமாகும். அப்போதுதான் இதற்கு உரிய நபர்களுக்கு அவை போய்ச் சேரும். பீகார் அரசு மாநில அளவில் சாதி அடிப்படையில் ஆய்வினை நடத்தி இருக்கிறது. வேறு சில மாநிலங்களும் இதனைச் செய்திடத் திட்டமிட்டிருக்கின்றன. மாநில அளவில் கணக்கெடுப்பு மேற் கொள்வது அந்தந்த மாநிலஅரசுகளின் தனி யுரிமையாகும். எனினும் இது அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாதி மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு மாற்றானதாக இருந்திட முடியாது. அகில இந்திய அளவிலான சாதி அடிப்படை யிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு யார் யாருக்கு எதை எதை அளித்திட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான முக்கியமான தேவையாகும்.
மத்தியக்குழு அறைகூவல்கள்
· இஸ்ரேல் இனப்படுகொலைக்கு எதிராக வும், பாலஸ்தீன மக்கள் தங்கள் தாய்நா ட்டுக்காக நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் ஒருமைப்பாட்டு நட வடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்துக் கட்சிக் கிளைகளையும் மத்தியக்குழு கேட்டுக் கொள்கிறது. · நவம்பர் 26-28 தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள விவசாயிகள் - தொழிலாளர் மகா முற்றுகை போராட்ட த்திற்கு கட்சி தன் ஆதரவினை தெரி விக்கிறது. · அதேபோன்று 2023 டிசம்பர் 4 அன்று தலித் அமைப்புகள் நடத்தவுள்ள நாடாளு மன்றம் நோக்கி பேரணிக்கும் கட்சி தன் ஆதரவை அளித்திடத் தீர்மானித்திருக் கிறது.
ஸ்மார்ட் மீட்டர் சூழ்ச்சிக்கு எதிராக கிளர்ச்சிப் போராட்டம்
மின்சாரத்தைத் தனியார்மயமாக்க வேண்டும் என்பதற்காக, மோடி அரசாங்கம், மின்நுகர்வோர் முன்னமேயே தொகைகளைச் செலுத்துவதற்கு வசதி செய்துதரும் விதத்தில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொறுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. இது மக்களைக் கடும் துன்பத்திற்குள்ளாக்கும். மின் கட்டணங்கள் மிகவும் உயர்த்தப்படக்கூடும். மின் விநியோகத்தைத் தனியார் கொள்ளைலாபம் ஈட்டுவதற்கு திறந்துவிடப்படக்கூடும். இது ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கடுமையான சுமைகளை ஏற்றிடும். எனவே எங்கெல்லாம் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படுகிறதோ அங்கெல்லாம் அவற்றை நிறுத்த வலியுறுத்தி கிளர்ச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.