states

img

சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என்பதா

சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என்பதா

அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்

புதுதில்லி குடியரசு துணைத் தலை வராக இருந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்த தைத் தொடர்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம்  தேதி நடைபெறவுள்ளது. எதிர்க் கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலை வர் வேட்பாளராக உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர் சன் ரெட்டியும், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாள ராக சி.பி.ராதாகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவா ளர் என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில் அமித் ஷா பேசியதாவது,“சுதர்ஷன் ரெட்டி நக்சலிசத்திற்கு உதவியவர். அவர் சல்வா ஜூடும் தீர்ப்பை வழங்கினார். சல்வா ஜூடும் தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், நக்சல் பயங்கரவாதம் 2020க்குள் முடிவு க்கு வந்திருக்கும். சல்வா ஜூடும் தீர்ப்பை வழங்கிய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர் அவர்” என்று கூறினார். சுதர்சன் ரெட்டி பதிலடி இந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சுதர்சன் ரெட்டி,“நான் தீர்ப்பை எழுதியுள்ளேன். தீர்ப்பு என்னுடையது அல்ல, தீர்ப்பு உச்சநீதிமன்றத்தினுடையது. தீர்ப்பின் தகுதியைப் பொறுத்த வரை, நான் பேசமாட்டேன், ஏனென் றால் ஒருவர் தனது சொந்த தீர்ப்பின்  மகத்துவத்தைப் பற்றிப் பேசக் ்கூடாது என்று என் சகாக்களால் எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது. அதை மக்கள்தான் தீர்மா னிக்க வேண்டும். இது எனது தனிப் பட்ட ஆவணம் அல்ல. உள்துறை அமைச்சர் அவர்களால் விளக்கப் படுவதற்குப் பதிலாக முழு தீர்ப்பை யும் அவரே படிக்க வேண்டும் என்று  நான் விரும்புகிறேன். சுமார் 40  பக்கங்களைக் கொண்ட தீர்ப்பைப்  படிக்க அவருக்கு அவ்வளவு நேரம் இருக்காது. அவர் தீர்ப்பைப் படித்தி ருந்தால், ஒருவேளை அவர் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்க மாட்டார். அவ்வளவுதான் நான் சொல்லிவிட்டு அதை அங்கேயே விட்டுவிடுகிறேன்” என பதிலடி கொடுத்தார். கடும் கண்டனம் இந்நிலையில், அமித் ஷாவின் இந்த அடாவடி பேச்சுக்கு முன்னாள் நீதிபதிகள் குழு எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கள் குரியன் ஜோசப், மதன் பி.லோ கூர், ஜே.செலமேஸ்வர், ஏ.கே. பட்நாயக், அபய் ஓகா, விக்ரம்ஜித்  சென் மற்றும் கோபால கவுடா ஆகி யோருடன் முன்னாள் தலைமை  நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.முரளிதர், கோவிந்த் மாத்தூர், சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் அஞ்சனா பிர காஷ் ஆகியோரும் கையொப்ப மிட்டு அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  அந்த அறிக்கையில்,“சல்வா ஜூடும் வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை பகிரங்கமாக தவறாகப் புரிந்து கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு துரதிர்ஷ்டவச மானது. தீர்ப்பு எந்த இடத்திலும், வெளிப்படையாகவோ அல்லது அதன் உரை, நக்சலிசம் அல்லது அதன் சித்தாந்தத்தை கட்டாய மாகவோ ஆதரிக்கவில்லை. இந்திய துணை குடியரசுத் தலைவர் பத விக்கான பிரச்சாரம் சித்தாந்த ரீதியாக இருக்கலாம். ஆனால் அதை நாகரிகமாகவும் கண்ணிய மாகவும் நடத்த வேண்டும். அத னால் எந்தவொரு வேட்பாளரின் சித்தாந்தத்தையும் விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். உயர் அரசி யல் அதிகாரி ஒருவர் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை பாரபட்சமாக தவறாகப் புரிந்துகொள்வது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது விளை வை ஏற்படுத்தும். மேலும் நீதித் துறையின் சுதந்திரத்தையே உலுக்கும்” என அதில் கூறப் பட்டுள்ளது.