புதுதில்லி, ஜன.31- மணிப்பூர் பாஜக வேட்பாளர் பட்டி யல் வெளியானதையடுத்து அந்தக் கட்சியில் ‘குத்து- வெட்டு’ ஏற்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்தும் என்பிபியில் இருந்தும் வந்த கட்சித் தாவிகள் 10 பேருக்கு இடங்கள் வழங்கப்பட்டதால் கோபமடைந்த பாஜக தொண்டர்கள், பல இடங்களில் தங்கள் அலுவலகங்க ளைத் தாக்கி சூறையாடியதுடன், பிர தமர் நரேந்திர மோடி, முதல்வர் பீரேன் சிங் ஆகியோரின் உருவ பொம்மை களையும் எரித்துள்ளனர். பாஜக அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டா லும், அதற்கு பலனில்லாத நிலை ஏற் பட்டுள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும், கட்சித் தலைமையின் முடிவை எதிர்த்து, முக்கியத் தலை வர்கள் பலரும் பாஜக-விலிந்து தங்க ளின் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூரில் பீரேன் சிங் தலைமை யில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்க ளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சி யாக உருவெடுத்தது. இருப்பினும், 21 இடங்களில் மட்டுமே வென்றிருந்த பாஜக, சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு அதிகாரத்திற்கு வந்தது. அதேபோல இந்தமுறையும் ஆட்சி யைக் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக தீவிரமாக உள்ளது. இதற்காக காங்கி ரஸ் மற்றும் என்பிபி கட்சியைச் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் 10 பேரை அண்மையில் தன்பக்கம் இழுத்தது. தற்போது வெளியிட்டுள்ள 60 தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியலில் கோவிந்தாஸ் கோந்தௌஜம் உள் ளிட்ட முன்னாள் காங்கிரஸ் தலை வர்கள் 10 பேருக்கு சீட்டும் வழங்கியது. இது பாஜகவுக்கு எதிராகவே திரும்பி யுள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பாஜக தலைமை அலுவலகத் திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.