ஜெய்ப்பூர், ஏப்.2- ராஜஸ்தானில் பெண் மருத்துவர் ஒருவர்தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அம்மாநில பாஜக மூத் தத் தலைவர் சிக்கியுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம் லால்சோட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வந் தார். அர்ச்சனா மகப்பேறு மருத்துவ ராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அர்ச்சனா நடத்தும் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப் பிணி ஒருவர், அதிக ரத்தப்போக்கு கார ணமாக பிரசவத்தின்போது உயிரி ழந்துள்ளார். ஆனால், மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாகவே கர்ப்பிணி உயிரிழந்ததாகவும், மருத்துவர் அர்ச்ச னாவை கைது செய்ய வேண்டும் என் றும் வலியுறுத்தி உறவினர்கள் போராட் டம் நடத்தினர். இதையடுத்து மருத்துவர் அர்ச்சனா மீது லால்சோட் காவல் நிலை யத்தில் சட்டப்பிரிவு 302-இன் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான மருத்துவர் அர்ச்சனா மருத்துவமனை யின் மேல்மாடியில் உள்ள தனது வீட் டில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) அன்று தற்கொலை செய்து கொண் டார். “என் கணவர் மற்றும் குழந்தை களை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் மரணத்திற்கு பிறகு என் கணவர் மற்றும் குழந்தைகளை தொந் தரவு செய்யாதீர்கள். நான் எந்த தவ றும் செய்யவில்லை, யாரையும் கொலை செய்யவில்லை. என் மரணம் நான் குற் றமற்றவள் என்பதை நிரூபிக்கலாம். அப்பாவி மருத்துவர்களை துன்பு றுத்தாதீர்கள்” என்று கடிதம் ஒன்றை யும் மருத்துவர் அர்ச்சனா எழுதி யிருந்தார். இதனிடையே உயிரிழந்த பெண் ணின் உறவினர்கள் மருத்துவமனை யை முற்றுகையிட்டு போராடிய தற்கும், மருத்துவமனைக்கும், மருத் துவர்களுக்கும் பெரும் அழுத்தத் தைக் கொடுத்ததற்கும், ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான ஜிதேந்திர கோத்வால்-தான் காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந் துள்ளது. இதையடுத்து பாஜக தலைவர் ஜிதேந்திர கோத்வால் மீது சட்டப் பிரிவு 306-இன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரைக் கைது செய்துள் ளனர்.