states

img

மோடி ஆட்சியில் தொடர்ந்து சரியும் இந்தியப் பொருளாதாரம்!

புதுதில்லி, மார்ச் 1- நடப்பு 2022-23 நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3-ஆவது காலாண்டிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக அடிவாங்கியுள்ளது. நடப்பு 2022-23 நிதியாண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross domestic product - GDP)  வளர்ச்சி 6.3 சதவிகிதமாக இருந்தது.  இந்நிலையில், 2022-23 நிதியாண்டின் மூன்றா வது காலாண்டிலும், இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி (GDP) மேலும் கடுமையாக அடி வாங்கி, 4.4 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சி யடைந்துள்ளது. முந்தைய 2021-22 நிதியாண்டின், இரண்டா வது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.4 சதவிகிதமாக இருந்த நிலையில்,  அதைக் காட்டிலும் 2022-23 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 2.1 சதவிகிதம் அளவிற்கு குறைந்து 6.3 சதவிகிதமானது. அதுதற்போது மேலும்  1.9 சதவிகிதம் குறைந்து 4.4 சதவிகிதமாகி யுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக, நாட்டின் பொருளாதாரம் சரி வைக் கண்டுள்ளது.

2022-23 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன்  வரையிலான முதல் காலாண்டில், இந்தியப் பொருளாதாரம் 13.5 சதவிகிதம் என்ற இரட்டை  இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. ஆனால், அதன்பிறகு, 2-ஆவது காலாண்டில் 6.3 சதவிகிதம், 3-ஆவது காலாண்டில் 4.4 சத விகிதம் என்று மோசமான நிலைக்குச் சென் றுள்ளது.  இதுவே கடந்த 2021-22 நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் 11.2 சதவிகித வளர்ச்சி யை இந்திய பொருளாதாரம் பதிவு செய்தி ருந்தது. தற்போது அதில் சரிபாதி வளர்ச்சி யைக் கூட எட்ட முடியாமல், 4.4 சதவிகிதமாக சரிந்துள்ளது. மதிப்பீடு செய்யப்பட்டிருந்த 4.7 சதவிகித வளர்ச்சியைக் கூட எட்டவில்லை.

பணவீக்கம், கடந்த 2022 மே மாதத்தில் இருந்து அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட வட்டி  விகித உயர்வு, உற்பத்தித் துறையின் மோச மான செயல்பாடு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேசிய புள்ளி யியல் அலுவலகம் (The National Statistical  Office - NSO), எனினும், 2022-23 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ஜிடிபி 7 சதவிகிதமாக இருக்  கும் என கூறியுள்ளது. என்எஸ்ஓ கூறுவதுபோல 7 சதவிகித வளர்ச்சி சாத்தியமானாலும் கூட,  அதுவும் கடந்த 2021-22 நிதியாண்டில் வளர்ச்சி  அளவான 9.1 சதவிகிதத்தை விட குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம், தொடர்ந்து குறைந்து வரும்  தேவை ஆகியவை பொருளாதார வளர்ச்சியை  பாதிக்கிறது. மேலும் கொரோனா தொற்றுக்குப்  பிறகு உற்பத்தி துறை மெதுவாக மீளத்  தொடங்கியுள்ளதால், நான்காவது காலாண்  டில் ஜிடிபி மேலும் குறையவே வாய்ப்புள்ள தாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ள னர். அதாவது, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி  விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதால் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி மேலும் குறையும் என்று அவர்  கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்துபோன வருவாய்; கூடிய செலவினம் நாட்டின் நிதிப்பற்றாக்குறை  67.8 சதவிகிதமாக அதிகரிப்பு!

புதுதில்லி, மார்ச் 1- அரசின் வருவாய்க்கும் செலவி னத்திற்கும் வருவாய்க்கும் இடையேயான வேறுபாடே நிதிப் பற்றாக்குறை எனப்படு கிறது. செலவினத்தை சமாளிப்பதற்காக அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை அளவிடும் கருவியாகவும் நிதிப் பற்றாக்குறை உள்ளது. அந்த வகையில், நடப்பு நிதியாண்டுக் கான நிதிப் பற்றாக்குறையானது, 2022 ஏப்ரல்  துவங்கி 23 ஜனவரியோடு முடிவடைந்த 10 மாதங்களில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 67.8 சதவிகிதத்தை எட்டியுள்ளது. நடப்பு 2022-23 நிதியாண்டில் (2022 ஏப்ரல்  முதல் 2023 மார்ச் வரையிலான 12 மாதங்க ளுக்கு) ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை யை ரூ. 17 லட்சத்து 55 ஆயிரம் கோடிக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த தொகையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில் 6.4 சதவிகிதமாகும்.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத  காலத்தில் மட்டும், நிதிப் பற்றாக்குறையா னது, நிர்ணயிக்கப்பட்ட 17 லட்சத்து 55 ஆயி ரம் கோடியில் ரூ. 11 லட்சத்து 90 ஆயிரம்  கோடியை எட்டியுள்ளது. இது எதிர்பார்க்  கப்பட்ட ஒட்டுமொத்த நிதிப்பற்றாக்குறை யில் 67.8 சதவிகிதம் ஆகும். கடந்த 2021-22 நிதியாண்டின் இதே ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத கால கட்டத்தில் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த எதிர்பார்ப்பில் 58.9 சதவிகிதமாக இருந் தது. நடப்பு நிதியாண்டில் அதிகரித்த செல வினம், குறைந்துபோன வருவாய் ஆகிய வற்றின் காரணமாக அது தற்போது 67.8 சதவிகிதத்தை எட்டியுள்ளது.  நடப்பு 2022-23 நிதியாண்டின் முதல்  10 மாதங்களில் வரி வருவாய் ரூ. 16 லட்சத்து  88 ஆயிரத்து 710 கோடியாக எதிர்பார்த்த தைக் காட்டிலும் குறைந்துள்ளது. அதா வது, பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட வரு வாயில் 80.9 சதவிகிதம் மட்டுமே ஆகும்.  இந்த வருவாயானது, கடந்த நிதியாண்டின்  இதே காலகட்டத்தில் பட்ஜெட் எதிர்பார்ப் பில் 87.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பி டத்தக்கது.  இவை ஒருபுறமிருக்க, அரசின் நிதிப் பற்றாக்குறையானது வரும் 2023-24 (2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலான) நிதி யாண்டில் 5.9 சதவிகிதமாக இருக்கும் என்  றும், 2025-26 நிதியாண்டுக்குள் இந்த நிதிப்  பற்றாக்குறை 4.5 சதவிகிதமாக குறைக் கப்படும் எனவும், பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மோடி அரசு அறிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு  56,127 கோடி டாலராக சரிவு!

புதுதில்லி, மார்ச் 1- இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 17-ஆம் தேதியுடன்  முடிவடைந்த வாரத்தில் 56,126.7 டால ராக சரிந்துள்ளது. முன்னதாக, பிப்ரவரி 10-ஆம் தேதி யுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச்  செலாவணி கையிருப்பு 831.9 கோடி டாலர் குறைந்து 56,694.8 கோடி டாலராக இருந்தது. இது பிப்ரவரி 17-ஆம் தேதி யுடன் நிறைவடைந்த வாரத்தில் மேலும்  568.1 கோடி டாலர் குறைந்து 56,126.7 கோடி டாலராகி உள்ளது. 2021 அக்டோபரில், உச்சபட்சமாக நாட்டின் அந்நியச் செலாவணி கை யிருப்பு 64 ஆயிரத்து 500 கோடி டாலர்கள் அளவை எட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது. மேலும், இதே வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணயச் சொத்துக் கள் 451.5 கோடி டாலர் குறைந்து 49,607.2 கோடி டாலராகவும், நாட்டின் தங்கம் கையிருப்பு 104.5 கோடி டாலர் குறைந்து 4,181.7 கோடி டாலராகவும், சர்வதேச நாணய சொத்துகள் (SDR)  8.7 கோடி டாலர் குறைந்து 1,826.7 கோடி  டாலராகவும் உள்ளது. அதேபோல சர்வ தேச நிதியத்திலும் (IMF) நாட்டின் கை யிருப்பு, 3.4 கோடி டாலர் குறைந்து 511.1 கோடி டாலராகி உள்ளது.