புதுதில்லி, நவ. 1- 2020 பிப்ரவரி இல் வடகிழக்கு தில்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர் களை பாதுகாக்க சிபிஎம் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பிரிஜ்புரியில் உள்ள மேஜர் ஜெய்பால் சிங் மெமோரியல் டிரஸ்டின் திறன் மேம்பாட்டு மையமான குவாமி ஏக்தா பவனை சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் விஜயராகவன் திங்க ளன்று (அக்.31) திறந்து வைத்தார். பிருந்தா காரத்தும் கலந்துகொண்டார். அமைப்புசாராத் துறையைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர் குடும்பங்கள் அதிகம் வசிக்கும் பகுதி யில் இதுபோன்ற மையம் அமைக்கப் பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையையும் அறக்கட்டளை உணர்ந்துள்ளது. ஐந்து மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்தில் முதற்கட்ட மாக குழந்தைகளுக்கான டியூஷன் சென்டர், குழந்தைகள் மற்றும் பெரிய வர்களுக்கான கணினி ஆய்வகம், பெண்களுக்கான தையல் பயிற்சி வசதி, பியூட்டிசியன் படிப்பு ஆகியவை அமைக்கப்படும்.
விழாக்கோலம் பூண்டிருந்த விழாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கா னோர் திரண்டனர். வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பெண்கள், இம்மையத்தின் மூலம் சுயதொழில் செய்து தங்களின் சொந்தத் திறனை வளர்த்து, வரு மானத்தைப் பெருக்க முடியும். தகவல் தொடர்பு, ஆங்கிலம் தவிர, கணினி படிப்புகளையும் குழந்தைகள் படிக்க லாம். இந்த நிகழ்வில் வடகிழக்கு தில்லி குடியிருப்பாளர்களின் மறுவாழ்வுக்கு கேரளாவின் அனைத்து ஆதரவையும் விஜயராகவன் உறுதியளித்தார். சாதி, மதம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கு மாக இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது என்று பிருந்தா காரத் கூறினார். தில்லி வன்முறைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதியும், குழந்தை களுக்கு கல்வி உதவித்தொகையும் சிபிஎம் வழங்கியது. அவை மீட்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தவர் களுக்கு வழங்கப்பட்டது. திறன் மேம்பாட்டு மையம் உருவாக ஒன்றி ணைந்த அனைவருக்கும் சிபிஎம் மாநிலக் குழு நன்றி செலுத்தியது.