தெலுங்கானா மாநில அரசின் அனைத்துத் துறைகளிலும் 91 ஆயி ரத்து 142 காலியிடங்கள் உள்ளதாகவும், அவை நேரடியாக நிரப்பப்படும் என்றும் முதல்வர் சந்தி ரசேகர ராவ் அதிரடி காட்டியுள்ளார். இதில் “11 ஆயிரத்து 103 ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய் யப்படுவதும் அடங்கும். காவல் துறையில் 13 ஆயிரத்து 334 பணியிடங்கள், கல்வித் துறையில் 13 ஆயிரத்து 086 பணியிடங்கள் என மொத்தமுள்ள 80 ஆயிரத்து 39 பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை களால் உடனடியாக பணி நியமனம் செய் யப்படும்” என்று சந்திரசேகர ராவ் தெரி வித்துள்ளார்.