states

img

2023-இல் பொருளாதார மந்த நிலை பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.. கொரோனாவுக்குப் பின் உலகளாவிய வறுமை, பட்டினி அதிகரிப்பு!

புதுதில்லி, ஏப். 8 - கொரோனாவுக்குப் பின் உலகளா விய பட்டினி, வறுமை அதிகரித்துள்ள தாகவும், 2023-ஆம் ஆண்டில், பொரு ளாதார மந்தநிலை பெரும் அச்சுறுத் தலாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறி யிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றுக்கு பின், 2021-ஆம் ஆண்டு சீரிய முறை யில் சென்று கொண்டிருந்த உலகப் பொருளாதாரம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை யால் பாதிக்கும் கீழாக குறைந்தது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் 2022 ஆம் ஆண்டில் உலக பொருளா தாரம் 6.1 சதவிகிதம் என்ற அளவில் இருந்து 3.4 சதவிகிதம் என குறைந்தது. கொரோனாவுக்குப் பின் உலக ளாவிய வறுமை மற்றும் பட்டினி அதிகரித்து உள்ளது. இவ்வாறு கடந்த ஆண்டு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சுணக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை மற்றும் ஆமை வேக பொரு ளாதார வளர்ச்சி நடப்பாண்டிலும் நீடிக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவே காணப்படும்.

கடந்த 20 ஆண்டுகளில் 3.8 சத விகிதம் என்ற குறைந்த அளவிலேயே உலக பொருளாதார மந்தநிலை சுழன்று கொண்டு இருந்தது. தற்போது 3 சதவிகிதத்திற்கும் குறைவான பொருளாதார மந்தநிலையானது, கடந்த 1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு கணக்கிடப்பட்ட குறைந்த நடுத்தர கால வளர்ச்சி அளவாகும். உலக பொருளாதாரத்தின் மெதுவான வளர்ச்சி பல்வேறு நாடுகளுக்கு பேரடி யாக இருக்கும். 90 சதவிகித முன்னே றிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதங்களில் சரிவைக் காணும் என கணிக்கப்பட்டு உள்ளது.  வளர்ந்து வரும் பொருளா தாரத்தில் ஆசிய நாடுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. குறிப்பாக 2023-ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் பாதி பங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு ஆசிய நாடுகள் கொண்டிருக்கும். அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த கால கூட்டம் நடைபெற உள்ளது. இந்த  கூட்டத்தில் பொருளாதார சுணக் கத்தை குறைப்பதற்கான நடவடிக்கை கள் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.  இவ்வாறு கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.