ரஷ்யாவின் எண்ணெய்யை ரூபிள்- ரூபாய் மூலம் வாங்கினால் கடும் விளைவுகள் என அமெரிக்கா இந்தியாவுக்கு மிரட்டல். இது மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியக் கூடாது. மோடி அரசாங்கம் சர்வதேச பிரச்சனைகளில் இந்தியாவின் சுயேச்சையான நிலைப்பாட்டை நிலைநிறுத்துவது மட்டுமல்லாது; இந்தியாவின் நலன்தான் அடிப்படை குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். இப்பொழுதாவது மோடி அரசாங்கம் ‘‘குவாட்’’ எனப்படும் அமெரிக்க தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளிவர வேண்டும்.
மத்திய பொதுத்துறைகளில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து நிரந்தரமற்ற ஊழியர்களின் எண்ணிக்கை உயர்வு. இது உழைப்பு சுரண்டலை தீவிரப்படுத்துகிறது. இட ஒதுக்கீடு நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு பொருந்துவது இல்லை. எனவே சமூக நீதியும் பாதிக்கப்பட்டு சமூக ஒடுக்குமுறையும் தீவிரமாகிறது. இந்த தாக்குதலை முறியடிப்பீர்!
அதானியின் நவிமும்பை விமான நிலையத்தின் ரூ.12,770 கோடி வராக்கடன் ஸ்டேட் வங்கி தள்ளுபடி! கூட்டுக் கொள்ளை களவாணி முதலாளித்துவத்தின் மிக மோசமான வடிவம். மோடியின் தலைமையிலான மதவாத காவி - கார்ப்பரேட் வஞ்சக கூட்டு தேசிய வளங்களையும் பொருளாதாரத்தையும் சிதைத்துக் கொண்டுள்ளன. தேசத்தையும் மக்களையும் பாதுகாக்க இந்த அரசாங்கம் தனது கொள்கைகளை திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்பட வேண்டும். அல்லது இந்த அரசாங்கம் வெளியேற்றப்பட வேண்டும்.
https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury