2020-ல் பாய்லர் வெடித்த விபத்தில் 15 தொழிலாளர்கள் பலியானது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி என்எல்சி அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். சுரங்க விபத்தில் பலி யானோர் குடும்பங்களுக்கு இழப்பீடோ, கருணை தொகையோ தரவில்லை என தொழிலாளர்கள் குடும்பத்தினர் தெரி வித்தனர். உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கும், காயமடைந்தவர்களுக் கும் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும் பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வழங் கப்படுகிறது என என்.எல்.சி. தரப்பு வழக்க றிஞர் கூறினார். இதையடுத்து என்எல்சி யில் தொடர்ந்து நடக்கும் விபத்துகள் மூலம் தொழிலாளர்கள் உயிரிழப்பதை எவ் வாறு எடுத்துக்கொள்வது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.