சிம்லா, அக்.19- இமாச்சல் பிரதேசத்தில் மேலும் ஒரு தொகுதிக்கு சிபிஎம் தனது வேட்பாளரை அறிவித்தது. திகந்தர் சிங் பன்வார் சிம்லா நகர் தொகுதி யில் போட்டியிடுகிறார். இது வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறிவித்துள்ள வேட்பாளர்களின் எண்ணி க்கை 12 ஆக உயர்ந்துள் ளது. உனா, சோலன் மற்றும் குலு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். மாநில செயற்குழு உறுப்பினரான திகந்தர், 2012இல் சிம்லாவின் துணை மேயராக தேர்ந் தெடுக்கப்பட்டவராவார். 2012 சட்டமன்றத் தேர்தலில் சிம்லாவில் போட்டியிட்டு மும்முனை போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். திகந்தர் வேட்பா ளராக அறிவிக்கப்பட்டதால், தியோக் தொகுதியைத் தவிர சிம்லாவிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தியோக் தொகுதியில் தற்போது சிபிஎம் எம்எல்ஏ ஆக உள்ள ராகேஷ் சிங்கா மீண்டும் போட்டியிடுகிறார். இவர்கள் தவிர, குஷால் பரத் வாஜ் (ஜோகிந்தர் நகர்), தேவகி நந்தா (அன்னி), பூபேந்திர சிங் (தரம்பூர் மண்டி), மகேந்திர ராணா (செராஜ்), டாக்டர். காஷ்மீர் சிங் தாக்கூர் (ஹமிர்பூர்), நரேந்திர சிங் (சம்பா), ஆஷிஷ் குமார் (பச்ட்), டாக் டர் குல்தீப் சிங் தன்வார் (கசும்தி), கிஷோரி லால் (கர்சோக்) மற்றும் விஷால் ஷங்க்தா (ஜுப்பல் கோட்காய்) மற்ற வேட்பாளர் களாவர்.