புதுதில்லி,பிப்.6- தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் முறைப்படுத்தப்படும், 50 சதவீத இடங்களுக்கு அரசுக் கல்லூரிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணை யம் (என். எம். சி ) (அனைத்து மாநிலங் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தேசிய மருத்துவ ஆணையம் சட்டம் 2019 இன் படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக் கான மருத்துவ கட்டணம் முறைப்படுத்து வது தொடர்பான விதிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரி கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களில் 50 சதவீத இடங்களுக்கு, அரசுக் கல்லூரிகளிலும் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இது அனைத்து மாநிங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.