மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, தில்லி மகாதேவ் சாலை யில் உள்ள ‘பிலிம்ஸ் டிவிஷன் ஆடிட்டோரி யத்தில்’ ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் (தெலுங்கு) திரையிடப்பட உள்ளது. இந்தி பேசும் மற்றும் பிற மொழி பேசும் மக்களிடையே மொழிப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க மாநிலங்களவையின் இந்தி சலாஹ்கர் சமிதி அளித்த பரிந்துரையை ஏற்று இந்த சிறப்புத் திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.