states

img

இரண்டாம் கட்டப் போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள் விரைவில் பிரகடனம்

புதுதில்லி, டிச.21- நாட்டின் விவசாய அமைப்புகள் இரண்டாம் கட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன. இது தொடர்பாக முடிவெடுக்க சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் கூட்டம் கர்னாலில் சனிக்கிழமை அழைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் முதல் கட்டப் போராட்டத்தின்போது ஒன்றிய அரசு ஏற்காத கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மீண்டும் போராட்டம் நடத்த விவசாயிகள் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசுகளுக்கு எதிரான போராட்ட நிகழ்ச்சிகளும் கூட்டத்தில் அறிவிக்கப்படும். கர்னாலில் நடைபெறும் கூட்டத்தில் 17 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்புகள் பங்கேற்கின்றன. ஜனவரி 26-ஆம் தேதி நடத்தப்படும் போராட்டத்தின் வழிமுறை குறித்து சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் அறிவிக்கப்படும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையில் நாடாளுமன்றத்திற்கு விவசாயிகள் பேரணி நடத்துவது குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.