states

பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர் தாக்கப்படுவதாக போலி வீடியோ

புதுதில்லி, ஏப். 6 - புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் போலி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ், வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த சில  மாதங்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் திடீரென போலி வீடியோக்கள் பகிரப்பட்டன.  இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பீகார் மாநில அரசும், ஜார்க்கண்ட் மாநில அரசும் தமிழ்நாட்டுக்கு குழுக்களை அனுப்பி தத்த மது மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழி லாளர்களிடம் நேரில் விசாரித்து அறிந்தது. அப்போது, போலி வீடியோக்களில் இடம்பெற்றதை போல தமிழ்நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. 

இதனிடையே, தமிழ்நாடு மக்களுக்கும், அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகை யில் பரப்பப்பட்ட போலி வீடியோக்கள் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பாஜகவினர்தான் திட்டமிட்டு இந்த போலி வீடியோக்களை வெளியிட்டு பீதியை ஏற்படுத்துவது தெரிய வந்தது. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ், இதே வேலையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பிரசாந்த் உம்ராவைக் கைது செய்ய, திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்த ராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப் படையும் அமைக்கப்பட்டது. இதனால் கைதிலிருந்து  தப்பிப்பதற் காக, பிரசாந்த் உம்ராவ் முன்ஜாமீன் கேட்டு தில்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். தில்லி உயர்நீதிமன்றமானது, தமிழ்நாடு நீதி மன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டது. உம்ரா வும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் பெற்றார்.  இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் 2 புதிய மனுக்களைத் தாக்கல் செய்த உம்ராவ், அதில், தம் மீதான முதல் தகவல் அறிக்கை களை (FIR) ஒன்றாக ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்; காவல் துறையிடம் ஆஜராவதற்கான நிபந்தனை யை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுக்கள், நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர்  அடங்கிய அமர்வு முன்பு, வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  புலம் பெயர் தொழிலாளர் தொடர்பான வீடியோ வை தெரியாமல் பகிர்ந்துவிட்டேன். தவறு என தெரிந்தபின்னர் அதனை நீக்கிவிட்டேன் என உம்ராவ் தெரிவித்தார். இதனை ஏற்று “மனுதாரர் 15 நாட்களுக்கு காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை மாற்றியமைக்கப்படுகிறது. அவர் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும், அதன்பின் விசாரணை அதி காரி தேவைப்படும்போது அவர் ஆஜராக வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள், அதே நேரம், 7 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணி யாற்றிய உம்ராவ் பொறுப்புடன் செயல் பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் உம்ராவ் ஏப்ரல் 10-ஆம் தேதிக் குள் நீதிமன்றத்தில் ஆஜராகி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உத்தர விட்டனர். இதையடுத்து, பாஜக செய்தித் தொடர் பாளர் பிரசாந்த் உம்ராவ், புலம்பெயர் தொழி லாளர் விவகாரத்தில் போலி வீடியோக் களை பரப்பியதற்கு திங்கட்கிழமைக்குள் (ஏப்ரல் 10) நீதிமன்றத்தில் ஆஜராகி பகிரங்க மன்னிப்பு கோருகிறார்.