ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23 அன்று சட்ட மன்ற தேர்தல் நடை பெறுகிறது. பாஜக இரண் டாக உடை யும் நிலை யில், காங்கி ரஸ் கட்சி மீண் டும் ஆட்சியை பிடிக்கும் என பெரும் பாலான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தோல்வி பயத்துடன் பாஜக பிரச் சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வியாழனன்று அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி யிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ் தான் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கல்வி அமைச்சரு மான கோவிந்த் சிங் தோதாஸ்ரா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் மொரிஷியஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘விஷ்னார் ஹோல் டிங்ஸ்’ என்ற நிறுவனத்திடம் இருந்து சட்ட விரோதமாக நிதி யை பெற்றதாக கூறி அவ ருக்கும் அமலாக்கத்துறை சம் மன் அனுப்பியது. வாக்குப்பதிவு நடைபெற ஒரு மாதமே உள்ள நிலையில் அமலாக்கத்துறை யின் இந்த நடவடிக்கை மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நிலையில், தோல்விபயம் காரணமாக அம லாக்கத்துறையை ஒன்றிய மோடி அரசு ஏவிவிட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ளன. இந்நிலையில், இந்த விவகா ரம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,”நாட்டில் தெரு நாய்களை விடவும், அம லாக்கத்துறைதான் அதிகமாக அலைகிறது. தற்போது இந்த ஏஜென்சிகள் அரசியல் கருவி களாக மாறிக் கிடக்கின்றன. பிரத மர் மோடி தன்னுடைய கவுண்ட்ட வுன் தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவரும் தற்போது எங்களு டைய `கியாரன்ட்டி மாடல்’-ஐ பின்பற்ற தொடங்கியிருக்கிறார்” என காட்டமாக கூறியுள்ளார்.