யுத்த வெறிபிடித்த இஸ்ரேலே, பாலஸ்தீன மக்களை அழிக்காதே என்கிற கோரிக்கை முழக்கத்தோடு கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு அரசியல் இயக்கங்கள் மற்றும் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள், இஸ்லாமிய கூட்டமைப்பு இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை சிவானந்தகாலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை ஏற்றார். இதில், திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கருப்புசாமி, மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ், விசிக செயலாளர் கோவை குமணன், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக்அலி, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் இரா.அதியமான், சிபிஐ(எம்எல்) வெங்கடாச்சலம், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் சி.வெண்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணி செயலாளர் மலரவன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.