states

img

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஏகபோக ஆதிக்கம் வேண்டாம்: வி.சிவதாசன் எம்.பி வலியுறுத்தல்

புதுதில்லி, செப்.13- ஆழ்கடல் மீன்பிடிப் பை ஏகபோகங்களுக்கு ஒப்படைப்பதில் இருந்து விலக வேண்டும் என்று ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவதாசன் கடிதம் எழுதியுள்ளார். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் இந்திய மீன்பிடி கப்பல்களுக்கான வரைவு வழி காட்டுதல்களில் (2022) அதிக அனுமதி கட்டணத்தை ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது. வழங்கப்பட்ட அனைத்து அனுமதி களும் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லு படியாகும் என்றும், ஒவ்வொரு இரண்டு வருடங்க ளுக்கும் அதிக கட்டணம் செலுத்தி அனுமதி புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் வரைவு வழி காட்டுதல்கள் கூறுகின்றன. இந்தக் கட்டணத்தை கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் சிறு மீனவர்களால் ஏற்க முடியாது என அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

;