states

img

ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி; பின்வாங்கியது மோடி அரசு?

புதுதில்லி, டிச. 31 - ஒன்றிய பாஜக அரசானது, 2022  ஜனவரி 1 முதல் பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை  12 சதவிகிதமாக வரை உயர்த்தப் போவதாக அறிவித்தது.  இதனால், புத்தாண்டு முதல் ஜவுளிப் பொருட்கள், காலணிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் கணிச மாக உயரும் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஜவுளித்துறை யினர், பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்பு காரணமாக, ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை ஒரு  மாதத்திற்கு ஒத்திவைப்பதென 46- ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத் தில் முடிவு செய்துள்ளது.

 செயற்கை நூலிழைக்கு 18 சத விகித ஜிஎஸ்டி-யும், அந்த நூலிழை யைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நூலுக்கு 12 சதவிகித ஜிஎஸ்டியும், செயற்கை நூலிழையைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைகளுக்கு 5 சத விகித ஜிஎஸ்டி-யும் விதிக்கப்பட்டு வந்தது. இதனை மாற்றி, மூன்றுக் கும் ஒரே மாதிரியாக ஜிஎஸ்டி வரி  விதிக்கப்படும் என்று ஒன்றிய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் மாதம் கூறினார். அதன்படி கடந்த நவம்பர் மாதம் இவற்றுக்கான புதிய வரி விகி தத்தை மத்திய நேரடி வரிகள் வாரி யம் அறிவித்தது. அதில், செயற்கை  நூலிழை, செயற்கை நூல், செய ற்கை நூலிழையால் நெய்யப்பட்ட ஆடை ஆகிய மூன்றுக்குமே 12 சத விகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் (GST on Readymade Garments) என்று கூறியது.  அதாவது, செயற்கை நூலிழைக் கான வரியில் 6 சதவிகிதத்தை குறைப் பது போல குறைத்து, ஆடைக்கான ஜிஎஸ்டி-யில் 7 சதவிகிதத்தை ஒன்றிய அரசு உயர்த்தியது. இந்த  வரி விதிப்பு 2022 ஜனவரி முதல்  அமலுக்கு வரும் என்றும் அப்போது அறிவித்தது.

இதன்காரணமாக செயற்கை நூலிழையாலான ஆடைகள், செயற்கை நூல், துணிகள், போர்வை கள், டெண்ட், மேஜை துணிகள், கம்பள விரிப்புகள், திரைச் சீலைகள் உள்ளிட்ட அனைத்து ஜவுளிப் பொருட்களின் விலைகளும் 2022 ஜனவரி 1 முதல் கணிசமாக உயரும் நிலை உருவானது. ஒட்டுமொத்த ஜவுளித் துறையின்கீழ், பட்டு கைத்தறி நெசவும் வருவதால், பட்டுச் சேலைகளின் விலையும் கணிசமாக உயரும் என அந்தத் துறையினர் தெரிவித்தனர். உதா ரணமாக 8 ஆயிரம் ரூபாய் பட்டுச் சேலை, இனி 11 ஆயிரம் ரூபாய்க்கு  விற்கப்படும். 3 ஆயிரம் வரை விலை  அதிகரிக்கும் என்று கூறினர். இந்தியாவில் ஜவுளித் துறை 5.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக உள்ளது. இந்த துறை யை நம்பி 3.9 கோடி தொழிலாளர் கள் உள்ளனர்.

இந்நிலையில், ஜவு ளித்துறை மீதான 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பால், நாடு முழு வதும் சுமார் 1 லட்சம் ஜவுளி யூனிட் கள் மூடப்படுவதோடு, சுமார் 15 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை  உருவாகும் என்று தொழிற்துறை யினர், பொருளாதார வல்லுநர்கள் கூறினர். மாநில அரசுகளும் இத னைக் குறிப்பிட்டு ஒன்றிய அரசுக்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்த னர். எனவே, வெள்ளியன்று நடை பெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 46-ஆவது கூட்டத்தில், இதுதொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதனடிப்படை யில், ஜவுளி உற்பத்திப் பொருட் களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சத விகிதத்திலிருந்து 12 சதவிகித மாக உயர்த்தும் முடிவை ஒத்தி வைப்பதென்றும், இந்த விவகாரத் தில் அடுத்த மாதம் இறுதி முடிவு எடுப்பதென்றும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதனால், ஜவுளிப் பொருட்கள் மீதான வரி ஜிஎஸ்டி உயர்வு தற்காலிகமாக தள்ளிப்போடப்பட்டுள்ளது. 15 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு மீது இப்போதும் ஆபத்து தொடர்கிறது. இதைத் தவிர, காலணிகளுக் கான 12 சதவிகித ஜிஎஸ்டி உயர்வு, ஓலா (Ola), உபேர் (Uber) வாடகை வாகன  முன்பதிவு, ஸ்விக்கி (Swiggy), ஜொமேட்டோ (Zomato) உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமான உணவு ஆர்டருக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஏற்கெனவே அறிவித்தபடி புத் தாண்டு முதல் அமலுக்கு வருகிறது

ஓலா, உபேர் வாடகை ஆட்டோ முன்பதிவுக்கு  5 சதவிகித ஜிஎஸ்டி

செயலிகள் மூலமாக முன்பதிவு செய்து ஆட்டோவில் பயணம் செய்வதற்கு முன்பு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஜனவரி 1 முதல்  ஆன்லைன் மூலம் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களில் வாடகை கார்கள், ஆட்டோக்களை புக் செய்யும்போது அதற்கு பயணிகள் 5 சதவிகிதம் (GST on Auto Fare) ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ரயில்,  பேருந்து என அனைத்து முன்பதி வுக்கும் இது பொருந்தும். 

ஸ்விக்கி-ஜொமேட்டோ ஆர்டருக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி

அதேபோல ஸ்விக்கி - ஜொ மேட்டோ (Swiggy,  Zomato) போன்ற உணவு நிறுவனங்களின் சேவையைப் பெறுவதற்கும்  புத்தாண்டு முதல் மோடி அரசு 5 சதவிகிதம் (GST on Online Food Order) வரி விதித்துள்ளது. ஹோட்டல்களில் உணவுப் பொருட் களை வாங்கும்போது, அதற்கு ஏற்கெனவே மக்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறார்கள். ஆனால், புத்தாண்டு முதல் உணவுப் பொருட் களின் விநியோகச் சேவைக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.