பிரதமர் மோடியின் நெருங்கிய நண் பரும், ரிலையன்ஸ் குழுமத் தலை வருமான முகேஷ் அம்பானிக்கு வந்த மெயில் ஒன்றில், பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது. அந்த மெயிலில், “ரூ.20 கோடி தர வேண் டும் என்றும், அவ்வாறு தராவிட் டால் உங்க ளைக்கொன்று விடு வோம். எங்களிடம் இந்தியாவிலேயே சிறந்த துப்பாக்கிச் சுடுபவர்கள் இருக்கி றார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கொலை மிரட்டல் தொடர்பாக முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நாட்டின் முதன்மையான பணக்கார ரான முகேஷ் அம்பானிக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பில் 10 என்எஸ்ஜி கமாண்டோக்கள் உட்பட 55 பாது காப்புப் பணியாளர்கள் அவருக்கு பாது காப்பு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.