ராஞ்சி, ஜுலை 27- ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிபிஎம் தலைவர் சுபாஷ் முண்டா குண்டர்களால் சுட்டுக்கொல் லப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜார்க்கண்ட் மாநிலக் குழு உறுப்பினராகவும், மாநிலத்தின் முக்கிய பழங்குடித் தலைவராக வும் விளங்கியவர் சுபாஷ் முண்டா (34). புத னன்று இரவு 8 மணியளவில் ராஞ்சிக்கு அருகே தலதாலி பகுதியில் உள்ள கட்சி அலுவல கத்தில் இவர் இருந்த போது, அங்கே வந்த அடையாளம் தெரியாத குண்டர்கள் சுபாஷ் முண்டாவை துப்பாக்கியால் சுட்டனர். இதில், படுகாயமடைந்த சுபாஷ் முண்டா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மக்கள் போராட்டம்
சுபாஷ் முண்டா கொலை செய்யப்பட்ட சம்பவம் தீயாய் பரவ தலதாலி பகுதியில் சிபிஎம் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் குவிந்தனர். சுபாஷ் முண்டாவின் உடலை தலதாலி சாலையில் வைத்துப் போராட்டம் நடத்தினர். பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டதால் தலதாலி பகுதி யில் போக்குவரத்து முடங்கியது.
ராஞ்சியில் பந்த்
சுபாஷ் முண்டா சுட்டுக்கொலை செய்யப் பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வியாழ னன்று பந்த் நடத்தினர். பந்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைத்து கலந்து கொண்ட னர்.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
சுபாஷ் முண்டா சுட்டுக்கொல்லப்பட்ட விவ காரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராஞ்சி எஸ்எஸ்பி கிஷோர் கவுஷல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”சுபாஷ் முண்டா கொலை விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைத்து கோணங்களிலும் வழக்கை விசாரித்து வரு கிறோம். இந்த வழக்கை விரைவில் தீர்ப்போம்” என்று ராஞ்சி எஸ்எஸ்பி கிஷோர் கவுஷல் கூறினார். ராஞ்சி ஏடிஎம் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேஷ்வர் நாத் அலோக் கூறு கையில்,“தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது. சுபாஷ் முண்டா கொலைக்குப் பிறகு, போராட்டத்தின் போது மக்கள் சாலை மறியல் செய்தனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களிடம் பேசி வரு கிறோம். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ள னர்” என்றார். சுபாஷ் முண்டாவுக்கு மனைவி, ஒன்றரை வயது மகன், பெற்றோர், நான்கு சகோத ரர்கள் உள்ளனர். இந்த துயர நேரத்தில் குடும்பத்துடன் கட்சி நிற்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு தெரிவித்துள்ளது.
அரசியல் தலைமைக்குழு கண்டனம்
புதுதில்லி, ஜூலை 27- தோழர் சுபாஷ் முண்டா கொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு மேலும் கூறியிருப்ப தாவது: 34 வயதான சுபாஷ் முண்டா, ராஞ்சி மாவட்டத்தில் நாக்ரி பகுதியில் மக்கள் செல்வாக்குடன் உள்ள மாபெரும் தலைவ ராவார். தோழர் முண்டா, பழங்குடியினர் ஏழை மக்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்ப தற்கான போராட்டங்களில் முன்னணி யில் நின்று போராடுபவர். அந்தப் பகுதி களில் பழங்குடியினரிடமிருந்து நிலங்க ளைப் பறித்திட முயன்றுவந்த நில மாஃபி யாக்களுக்கும், கந்துவட்டிக்காரர்களுக் கும் இதனால் இவர் மீது மிகுந்த ஆத்தி ரம் இருந்து வந்தது. மக்கள் மத்தியில் மகத்தான செல் வாக்குடன் இவர் விளங்கியதன் காரண மாக அங்கே ஹாதியா சட்டமன்றத் தொகு தியில் நடைபெற்ற தேர்தலின் போது இரு தடவையும், சமீபத்தில் மண்டார் சட்ட மன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின்போதும் சுபாஷ் முண்டாவை வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தியது. தற்போது அவர் ராஞ்சியில் தலாடி சவுக்கில் உள்ள அலுவலகத்தில் இருந்த போது புதனன்று சுட்டுக் கொல்லப்பட்டுள் ளார். சுபாஷ் முண்டாவின் கொடூரமான கொலை குறித்து விசாரணை செய்திட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, கொலை செய்தவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது உடனடியாக வழக்குத் தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.