states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் கர்நாடக மாநில செயலாளர் டாக்டர் கே.பிரகாஷ் 

கர்நாடக காங்கிரஸ் அரசு மாநிலத்தில் மதவாத சக்திகளை கட்டுப்படுத்தவில்லை. பாஜகவை வீழ்த்தி  காங்கிரஸ் அரசு பதவியேற்ற பிறகும், மதவாத சக்திகளின் செயல்பாடுகள் மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளன. இது மக்களை ஏமாற்றும் செயலாக கருதப்படும். அதனால் மதவாத சக்திகளை ஒடுக்க வேண்டும்.

ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ்

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் 2 தலித் இளை ஞர்கள் பசுக் கடத்தலில் ஈடுபட்டதாக கொடூரமாக தாக்கி  தலையை மொட்டை அடித்து, புல்லையும், கழிவு நீரையும் குடிக்க கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறல் ஆகும். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இந்துத்துவா குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

உ.பி., பாஜக அரசு பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், சிறுபான்மையினர் சமூகத்தினரை ஒடுக்குகிறது ; மிரட்டுகிறது. பகவத் கீதையை பாடவும், அது பற்றி விளக்கவும் சிலருக்கு (இந்துத்துவா) மட்டுமே அனுமதி வழங்கப்படுவது ஏன்? பகவத் கீதை அனைவருக்கும் சொந்தமானது. தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மராத்தி மொழியை அவமதிக்கவே மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மராத்தி இலக்கியவாதிகள் மவுனமாக இருக்க காரணம், அவர்களில் பலர் அரசாங்கத்துடனான நேரடி தொடர்பில் உள்ளனர். அதனால் இந்த விவகாரத்தில் அவர்கள் குரல் கொடுக்கவில்லை.