புதுதில்லி, ஜன. 31 - கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனைபெற்ற வர்களின் ஜாமீன் மனு தொடர்பான விவகாரத்தில், குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, குஜராத் மாநி லம் கோத்ராவில் கரசேவகர்கள் வந்த 2 ரயில் பெட்டிகளில் தீ பற்றிய தில், 59 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தைத் தொடர்ந்தே குஜ ராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதி ரான மிகப்பெரிய மத வன்முறை அரங்கேற்றப்பட்டது. ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்ட னர். பாலியல் வன்கொலைகள், வீடுகள், கடைகள் சூறையாடல் சம்பவங்கள் அரங்கேறின. இதனிடையே, ரயில் பெட்டி எரிக்கப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 31 பேர்களில், சிலர் தங்களுக்கு ஜாமீன் கோரி, அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு திங்களன்று விசார ணைக்கு வந்த நிலையில், குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலி சிட்டர் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அவர், “ரயில் பெட்டி எரிக்கப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெட்டி மீது தாங்கள் கற்களை மட்டுமே வீசியதாக ஜாமீன் கோரி யுள்ள குற்றவாளிகள் தெரிவித்து ள்ளனர். ஆனால் பயணிகளை வெளியே வர முடியாதபடி செய்து பெட்டிக்குத் தீவைத்து கற்களை வீசினால், அந்தச் செயலை கல்வீச்சாக மட்டும் கருத முடி யாது; எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது” என்று எதிா்ப்புத் தெரி வித்தார். இதனைத் தொடர்ந்து ஜாமீன் மனுக்கள் தொடர்பாக பதி லளிக்குமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங் களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.