இம்பால், பிப். 28 - மணிப்பூரில் மதுபான கடைகள் திறப்போம் என்ற பாஜக முதல்வர் பைரேன் சிங்கின் அறிவிப்பு, மாநி லத்தின் பெண்களை அவமதிப்ப தாகும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். 60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 10 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் பிரச்சா ரத்தில் ஈடுபட்ட மணிப்பூர் முதல்வரும், பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒரு வருமான பைரேன் சிங், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநி லத்தில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தெரிவித்தார். மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கின் இந்த அறிவிப்புக்குத்தான் காங்கிரஸ் தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். “முதல்வரின் இந்த அறிவிப்பு மணிப்பூர் பெண்களுக்கு அவமானம். முதற்கட்டத் தேர்தலுக்கான பிரச்சா ரம் முடிவடைவதற்கு 48 மணி நேரத்து க்கு முன், பாஜக முதல்வர், இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறி வித்தது அதிர்ச்சியளிக்கிறது. முதல்வர் உடனடியாக இதை திரும்பப்பெற வேண்டும்” என்று டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு மணிப்பூர் அரசு மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வந்தது. அதேநேரம், மாநிலத்தின் மலைப் பகுதிகளில் அதிகம் வசிக்கும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடி யினர் நாட்டு மதுபானம் காய்ச்சுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 30 ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் மது விற்பனை இல்லை. ஆனால், பாஜக முதல்வர் பைரேன் சிங் மீண்டும் மதுக்கடைகளைத் திறப்பதாக அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.