states

img

ஜி.20 நாடுகளின் கூட்டத்தில் ஒன்றிய தொழிலாளர்துறை அமைச்சர் அறிக்கைக்கு-சிஐடியு கண்டனம்

ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர், இந்தோனேஷியா பாலியில் நடைபெற்ற ஜி.20 நாடுகளின் பொதுத் தொடர்பு பயிற்சிக் (Public Relation Exercise) கூட்டத்தில், சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு முற்றிலும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் அங்கே பேசும்போது கோவிட் பெருந் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து தொழிலாளர்கள் மீள்வதற்கு தொழிலாளர்களுக்கு மீளவும் வேலைவாய்ப்பு நிலைமைகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கும் அதே சமயத்தில், இந்தியாவிலோ, ஒன்றிய அரசானது கோவிட் தொற்றுக் காலத்தில் புதிதாக ‘லேபர் கோடுகள்’ (‘labour codes‘) உருவாக்கி,   தொழிலாளர்கள் இதுநாள்வரையிலும் பெற்றுவந்த உரிமைகளை ஒழித்துக்கட்டும் வேளையில் இறங்கி இருக்கிறது.

இவர்கள் புதிதாகக் கொண்டுவந்துள்ள சமூகப் பாதுகாப்புச் சட்டம் (social secureity code), இதுநாள்வரையிலும் பீடித் தொழிலாளர்களுக்கும், சுரங்கத் தொழிலாளர்களுக்கும் இருந்து வந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒழித்துக் கட்டி இருக்கிறது. நாட்டிலுள்ள தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் சமூகப் பாதுகாப்பு வலைப் பின்னலுக்குள் கொண்டுவரப்படாததால் முதலாளிகள் மிகவும் பயன் அடைந்திருக்கிறார்கள்.

அமைச்சரின் அறிக்கை வேலைவாய்ப்புப் பெருக்கம் குறித்தும், சமூகப் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தும், திறன் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் வலுவான கொள்கைகள் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால் அவருடைய அரசாங்கமே அதற்கு நேரெதிராக நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே, அமைச்சரின் இந்த அறிக்கையானது பாசாங்குத்தனமான மக்கள் விரோத அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள ஓர் அறிக்கையே தவிர அதில் உண்மை எதுவும் இல்லை என்று சிஐடியு வலுவான முறையில் தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு சிஐடியு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

(ந.நி.)

;